ஜூன் 6 ஆம் தேதி தொடங்குகிறது பருவமழை..! இப்போதே குஷியான மக்கள்..!

Published : May 16, 2019, 12:21 PM ISTUpdated : May 16, 2019, 12:23 PM IST
ஜூன் 6 ஆம் தேதி தொடங்குகிறது பருவமழை..! இப்போதே குஷியான மக்கள்..!

சுருக்கம்

வரும் ஜூன் 6ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

ஜூம் 6 ஆம் தேதி தொடங்குகிறது பருவமழை..! இப்போதே குஷியான  மக்கள்..! 

வரும் ஜூன் 6ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதற்கான சூழல் தற்போது அந்தமான் கடல் பகுதியில் உருவாகி உள்ளது என்றும், இதனை பொறுத்து கணக்கிட்டால் மே 19 மற்றும் 20ம் தேதி ஆகிய நாட்களில் தென்கிழக்கு வங்கக்கடலில் இதற்கான சூழல் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தற்போது சுட்டெரிக்கும் வெயிலுக்கு நடுவே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இருந்தபோதிலும் சென்னையை பொருத்தவரையில் வெப்பநிலை சற்று அதிகமாக உள்ளது. அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

மழை பெய்யும் மாவட்டங்களை தவிர இதர பல மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்மேற்கு பருவ மழை வரும் ஜூன் மாதம் ஆறாம் தேதி தொடங்க உள்ளதால் தமிழகத்திற்கும் புதுவைக்கும் ஓரளவிற்கு மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Summer Flowers: கடவுளுக்குப் பூக்கள்.! வீடு முழுவதும் வாசம்.! கோடையில் பால்கனியில் வளர்க்க ஏதுவான 6 செடிகள்.!
Miss India 2026: வெறும் 3 மாத பயிற்சி... உலக அழகி போட்டிக்கு தகுதி.. யார் இந்த சாத்வி செய்ல்? மிஸ் இந்தியா சீக்ரெட் கதை!