தீப்பிடித்து, வெடித்து சிதறியது ஆப்பிள் ஐ போன் 7....!!! சேம்சங்கை தொடர்ந்து ஐ போனை பிடித்தது ஏழரை....!!
கடந்த மாதம் முழுக்க, சேம்சங் நோட் 7, ஆங்காங்கு தீப்பற்றி எறிவதாக எழுந்த புகாரை அடுத்து, தற்போது அதன் பயன்பாடு முற்றிலும் நிறுத்தபட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது, புது சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது, பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் , புது வரவாக வெளிவந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஆப்பிள் ஐ போன் 7 தான் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளது.
ஆஸ்ட்ரேலியாவில் வசிக்கும் ஜோன்ஸ் என்ற நபர் தான் இந்த பிரச்சனையை சந்தித்து உள்ளார். அதாவது, தான் பயன்படுத்தி வந்த புதிய ஆப்பிள் ஐ போன் 7......ஐ , தன்னுடைய காரில் வைத்துவிட்டு, சிறிது நேரம் காற்று வாங்க கடற்கரைக்கு சென்றுள்ளார் ஜோன்ஸ். திரும்பி வந்து பார்க்கும் போது, ஜோன்சின் காரிலிருந்து புகை வந்து கொண்டிருந்துள்ளது .
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜோன்ஸ், காரை திறந்து பார்க்கும் போது, ஆப்பிள் ஐ போன் 7 எரிந்து சிதறி இருந்ததாகவும், இதனால், அவருடைய காரில் இருந்த சிறிய பில்லோவும் எரிந்து, கார் முழுக்க , தீப்பிடித்து எரிய தொடங்கியதாகவும், தெரிவித்துள்ளார்.
தீப்பற்றியதற்கு காரணம் அலுமினியம் பாடியால் , ஆப்பிள் ஐ போன் 7, கவர் செய்துள்ளதால், சூரிய கதிர் அதன் மீது விழும் போது, தீப்பிடித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த காட்சிகளில் சில உங்களுக்காக........
சேம்சங் கதை முடிந்துவிட்டது.............இப்ப ஆப்பிள் ஐ போன் 7 கதை ஆரம்பமாகிவிட்டது ..........!!!
என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...............