'முடவாட்டுக்கால் கிழங்கு' சூப் குடிங்க.. மூட்டு வலி, முடக்கு வாதத்திற்கு குட் பை சொல்லுங்க..!!

Published : Mar 27, 2024, 01:38 PM ISTUpdated : Mar 27, 2024, 01:50 PM IST
'முடவாட்டுக்கால் கிழங்கு' சூப் குடிங்க.. மூட்டு வலி, முடக்கு வாதத்திற்கு குட் பை சொல்லுங்க..!!

சுருக்கம்

முடவாட்டுக்கால் கிழங்கு என்றால் என்ன? அதை சூப் செய்வது எப்படி மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

முடவாட்டுக்கால் கிழங்கு. இது பார்ப்பதற்கு ஆட்டுக்கால் போல இருக்கும். முடவன் ஆட்டுக்கால், ஆட்டுக்கால் கிழங்கு என்று அழைக்கப்படும் இந்த கிழங்கை சூப் வைத்து குடித்தால் மூட்டு வலியை போக்கும். எனவே, இந்த கட்டுரையில் முடவாட்டுக்கால் கிழங்கு என்றால் என்ன? அதை சூப் செய்வது எப்படி மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

முடவாட்டுக்கால் கிழங்கு என்றால் என்ன?
முடவாட்டுக்கால் கிழங்கு மலை அடிவாரத்தில், அதுவும் இரண்டு பாறைகளுக்கு இடையே வளரக்கூடிய ஒரு தாவரம் ஆகும். குறிப்பாக இது  குளிர்ச்சியான இடத்தில் தான் வளரும். 
மேலும் இது வாதம், பித்தம், கபம் போன்றவற்றால் வரும் நோய்களை விரட்ட ஒரு அருமருந்து என்று சொல்லலாம். காலம் காலமாக மலைவாசிகள் இதை உணவாக சாப்பிட்டு வருகின்றனர்.

முடவாட்டுக்கால் கிழங்கு சூப்:

தேவையான பொருட்கள்:
முடவாட்டுக்கால் கிழங்கு - 1
சின்ன வெங்காயம் - 8
பூண்டு - 3 பல்
இஞ்சி - 1 சின்ன துண்டு
மிளகு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
தக்காளி - 1 சிறியது
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு

இதையும் படிங்க:  இளைஞர்களுக்கு மூட்டுவலி ஏன் வருகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க..!!

செய்முறை:

  • இந்த சூப் செய்ய முதலில் முடவாட்டுக்கால் கிழங்கு எடுத்து அதன் மேல்புறத்தை சுத்தமாக நீக்கி, பிறகு தண்ணீரில் நன்கு கழுவவும்.
  • பிறகு கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
  • இப்போது இவற்றுடன் சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு மற்றும் சிறிது கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொள்ளவும்
  • இதனை அடுத்து, ஒரு பாத்திரத்தில்  அரை லிட்டர் தண்ணீர், அரைத்த கலவை, தக்காளி சிறிதளவு மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து, 5 முதல் 7 நிமிடங்கள் கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.அவ்வளவுதான் இப்போது சூப்பரான முடவாட்டுக்கால் சூப் தயார்..!!

இதையும் படிங்க: Joint Pain Relief : இந்த 5 பொருட்கள் மட்டும் போதும்...உங்க மூட்டு வலி பறந்து போகும்..!!

முடவாட்டுக்கால் கிழங்கு சூப் நன்மைகள்:

  • முடவாட்டுக்கால் கிழங்கு சூப் மூட்டு வலி, முழங்கால் வலி, குதிகால் வலி ஆகியவற்றிற்கு நிவாரணம் அளிக்கும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் நல்லது.
  • குழந்தைகளுக்கு ஏற்படும் வாத நோய்க்கு இந்த சூப் அருமருந்தாகும்.
  • கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி போன்ற வலிகளுக்கு இந்த சூப் நல்லது.
  • குறிப்பாக முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் உகந்தது.

முக்கிய குறிப்பு: முடவாட்டுக்கால் கிழங்கு சூப்பை மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் தான் குடிக்க வேண்டும். மூட்டு வலி முடக்கு வாதம் இருந்தால், தொடர்ந்து 10 முதல் 15 நாட்கள் இந்த சூப்பை குடித்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Thyroid Belly : தைராய்டால் வந்த அதிக எடை, 'தொப்பை' அற்புத மூலிகை பானம்! எப்படி தயார் செய்யனும்?
Bread Omelette for Breakfast : காலை உணவாக பிரட் ஆம்லெட் சாப்பிட்டுறது நல்லதா? தொடர்ந்து சாப்பிடுவறங்க இதை கவனிங்க