
அமர்நாத் யாத்திரைக்கு எதிராக எதிர்ப்பு முன்னணி (டிஆர்எஃப்) என்ற பயங்கரவாத அமைப்பு இன்று மிரட்டல் விடுத்தது. TRF என்பது லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) நிழல் அமைப்பாகும். அமர்நாத் யாத்திரை ஜூலை 1ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அமர்நாத் புனித யாத்திரை அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல் என்று பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே யாத்ரீகர்களுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து டிஆர்எஃப் எச்சரித்தது. யாத்திரையை குறிவைக்க தயங்க மாட்டோம் என்று பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரியில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் TRF ஐ பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. உள்துறை அமைச்சகமும் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மும்பை ஐஐடிக்கு ரூ.315 கோடி நன்கொடை கொடுத்த 'இன்போசிஸ்' நந்தன் நிலேகனி!
ஜூலை 1-ம் தேதி தொடங்கும் அமர்நாத் யாத்திரை
62 நாள் யாத்திரை ஜூலை 1-ம் தேதி தொடங்க உள்ளது. ஜூன் 30-ம் தேதி முதல் பக்தர்கள் ஜம்முவில் இருந்து யாத்திரை புறப்படுவார்கள். இந்த புனித ஆலயம் தெற்கு காஷ்மீர் இமயமலையில் 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஆகஸ்ட் 31ம் தேதி யாத்திரை நிறைவடைகிறது.
அமர்நாத் யாத்திரைக்கு முன்னதாக, ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) தில்பாக் சிங் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஸ்ரீநகரில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் உயர்மட்ட பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காவல்துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இரண்டு வழிகளில் யாத்திரை மேற்கொள்ளலாம். ஒன்று, தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் வழியாக பாரம்பரிய 48-கிமீ பாதை வழியாக செல்லலாம். மற்றொரு பாதை, மத்திய காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் 14-கிமீ பால்டால் பாதை. பால்டால் பாதை குறுகியதாக இருந்தாலும், அது மிகவும் செங்குத்தான பாதையாகும்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொலை மிரட்டல்.. டெல்லி போலீசார் பரபரப்பு தகவல்