இந்தியாவிலும் 50% பரம்பரை வரி.. காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு பாஜக பதிலடி..

By Ramya sFirst Published Apr 24, 2024, 11:54 AM IST
Highlights

இந்தியாவிலும் அமெரிக்கா போன்ற பரம்பரை வரி சட்டம் கொண்டு வருவது குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறிய சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா, இந்தியாவிலும் அமெரிக்கா போன்ற பரம்பரை வரி சட்டம் கொண்டு வருவது குறித்து விவாதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில், ஒரு நபரின் சொத்துக்களில் 55 சதவீத பங்கை அமெரிக்க அரசாங்கம் கோருவதற்கு உரிமையுடைய ஒரு பரம்பரை வரி உள்ளது என்று தெரிவித்தார்..

இதுகுறித்து பேசிய அவர் " அமெரிக்காவில், பரம்பரை வரி உள்ளது. ஒருவரிடம் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்து இருந்தால், அவர் இறக்கும் போது அவர் தனது குழந்தைகளுக்கு 45% மட்டுமே மாற்ற முடியும், 55% அரசாங்கத்தால் பறிக்கப்படுகிறது. அது ஒரு சுவாரஸ்யமான சட்டம், உங்கள் தலைமுறையில் நீங்கள் செல்வத்தை உருவாக்குகிறீர்கள், நீங்கள் உங்கள் செல்வத்தை பொதுமக்களுக்காக விட்டுவிட வேண்டும். எல்லா செல்வத்தையும் இல்லை. அதில் பாதி, இது எனக்கு நியாயமான சட்டமாக தெரிகிறது.

Andhra pradesh Election 2024: முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு என்ன?

இந்தியாவில், உங்களிடம் அந்த சட்டம் இல்லை. ஒருவன் 10 பில்லியன் சொத்து மதிப்புடையவன், அவன் இறந்தால், அவனுடைய பிள்ளைகளுக்கு 10 பில்லியன் கிடைக்கும், பொதுமக்களுக்கு ஒன்றும் கிடைக்காது... எனவே, இந்த மாதிரியான பிரச்சினைகளைத்தான் மக்கள் விவாதிக்க வேண்டும். நாளின் முடிவில் என்ன முடிவு வரும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் செல்வத்தை மறுபங்கீடு செய்வது பற்றி பேசும்போது, புதிய கொள்கைகள் மற்றும் புதிய திட்டங்களைப் பற்றி பேசுகிறோம், அது மக்களின் நலனுக்காக மட்டுமே.. பெரும் பணக்காரர்களின் நலனுக்காக அல்ல” என்று தெரிவித்தார்.

எனினும் இந்தியாவை அழிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக பா.ஜ.க விமர்சித்துள்ளது. பரம்பரை வரி குறித்த சாம் பிட்ரோடாவின் சமீபத்திய கருத்துகளுக்கு பதிலளித்த பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அமித் மாளவியா, நாட்டை அழிக்க நினைக்கிறது என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது என்று கூறினார்.

இதுகுறித்து பேசிய அவர் "காங்கிரஸ் இந்தியாவை அழிக்க முடிவு செய்துள்ளது. இப்போது, சாம் பிட்ரோடா சொத்து மறுபங்கீட்டிற்கு 50 சதவீத பரம்பரை வரியை பரிந்துரைக்கிறார். இதன் பொருள், நமது கடின உழைப்பு மற்றும் தொழில் மூலம் நாம் சம்பாதிக்கும் பணத்தில் 50 சதவீதம் பறிக்கப்படும். காங்கிரஸ் வெற்றி பெற்றால் நாம் செலுத்தும் அனைத்து வரிகளும், உயரும்" என்று தெரிவித்தார். இதே போல் பாஜக தலைவர்கள் பலரும் அவரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

Andhra pradesh Election 2024: 5 ஆண்டுகளில் 191 சதவீதம் உயர்ந்த பவன் கல்யாண் சொத்து மதிப்பு!

சாம் பிட்ரோடாவின் பரம்பரை வரி தொடர்பான கருத்துக்கு காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. அக்கட்சியின் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர், ஜெய்ராம் ரமேஷ், " சாம் பிட்ரோடா உட்பட உலகம் முழுவதும் உள்ள பலருக்கு வழிகாட்டியாகவும், நண்பராகவும், தத்துவஞானியாகவும், இருந்து வருகிறார். இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர் ஏராளமான, நீடித்த பங்களிப்புகளைச் செய்துள்ளார். அவர் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவராக உள்ளார்.

அவர் தனது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்துகிறார். ஒரு ஜனநாயகத்தில், ஒரு நபர் தனது தனிப்பட்ட கருத்துக்களைப் பற்றி விவாதிக்கவும், வெளிப்படுத்தவும், விவாதிக்கவும் சுதந்திரமாக இருக்கிறார். ஆனால் அவரின் கருத்துக்கள் எப்போதும் இந்திய தேசிய காங்கிரஸின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கின்றன என்று அர்த்தம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

click me!