PM Modi : ரெமல் சூறாவளி.. அதிக மழைக்கு வாய்ப்பு.. அனைத்தும் தயார் நிலையில் உள்ளதா? பிரதமர் மோடி ஆய்வு!

By Ansgar RFirst Published May 26, 2024, 9:43 PM IST
Highlights

PM Modi : வடக்கு வங்காள விரிகுடாவில் “ரெமல்” சூறாவளி தாக்கவுள்ள நிலையில், தயார்நிலையை குறித்து பிரதமர் மதிப்பாய்வு செய்தார். சூறாவளி புயலால் மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு வங்காள விரிகுடாவில் “ரெமல்” சூறாவளிக்கான தயார்நிலையை மறுஆய்வு செய்வதற்கான கூட்டத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று லோக் கல்யாண் மார்க்கில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த கூட்டத்தை தலைமை தாங்கினார். IMD கணிப்புகளின்படி, சூறாவளி புயல் இன்று நள்ளிரவில் மோங்லாவின் தென்மேற்குக்கு (வங்காளதேசம்) அருகில் உள்ள சாகர் தீவுகள் மற்றும் கெபுபாரா இடையே வங்காளதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்க கடற்கரைகளை கடக்கக்கூடும். 

இதனால் மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அதிக மழை எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழு மேற்கு வங்க அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக பிரதமருக்கு விளக்கப்பட்டது. அனைத்து மீனவர்களும் தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Latest Videos

Sujata : ஒடிசா.. தமிழர் வி.கே பாண்டியனின் மனைவியை தூக்கியடித்த தேர்தல் ஆணையம்.. ஏன்? இதுதான் காரணம்! 

சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசு மாநில அரசுக்கு முழு ஆதரவை வழங்கியுள்ளது என்றும், அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். புயலின் தாக்கத்திற்கு பிறகு, மறுசீரமைப்புக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காக உள்துறை அமைச்சகம் நிலைமையைக் கண்காணித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். 

மேற்கு வங்காளத்திலும், ஒடிசாவிலும் ஏற்கனவே 12 NDRF குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதைத் தவிர, ஒரு மணி நேரத்திற்குள் செல்லக்கூடிய பல குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இந்திய கடலோரக் காவல்படை எந்த அவசரநிலைக்கும் தனது உதவிகளை அனுப்பும். எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க துறைமுகங்கள், ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைகள் மிகுந்த கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

Reviewed the preparedness in the wake of Cyclone Remal. Took stock of the disaster management infrastructure and other related aspects. I pray for everyone’s safety and well being. pic.twitter.com/JW4iybKS5g

— Narendra Modi (@narendramodi)

பிரதமரின் முதன்மை செயலாளர், அமைச்சரவை செயலாளர், உள்துறை செயலாளர், DG NDRF, DG, IMD மற்றும் உறுப்பினர் செயலாளர், NDMA ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பல கிராமங்களுக்கு உயிர் நாடி.. இந்தியாவில் ஓடும் "கட்டணமில்லாத ரயில்" பற்றி கேள்விப்பட்டதுண்டா? ஒரு பார்வை!

click me!