ஆணாதிக்கம், பேராசை : குர்ஆன் ஆணையை மீறி முஸ்லிம் பெண்களின் வாரிசுரிமையை பறிக்கும் சகோதரர்கள்..

Published : May 09, 2023, 05:05 PM ISTUpdated : May 09, 2023, 05:13 PM IST
ஆணாதிக்கம், பேராசை :  குர்ஆன் ஆணையை மீறி முஸ்லிம் பெண்களின் வாரிசுரிமையை பறிக்கும் சகோதரர்கள்..

சுருக்கம்

புனித குர்ஆனின் விதிகளின்படி மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு பெற்றோர் சொத்தில் ஒரு பங்கை வழங்குவது கட்டாயமாகும். ஆனால் பெண்களுக்கு சொத்துரிமை வழங்க அவர்களின் சகோதரர்கள் மறுக்கின்றனர்.

இஸ்லாம் மதத்தில், புனித குர்ஆனின் விதிகளின்படி மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு பெற்றோர் சொத்தில் ஒரு பங்கை வழங்குவது கட்டாயமாகும். தந்தையின் சொத்தில் மூன்றில் ஒரு பங்கை மகள்களுக்கு வழங்க வேண்டும் என்று குர்-ஆனில் கூறப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், பெண்கள் - சகோதரிகள், மகள்களின் பங்கை அவர்களுக்கு வழங்குவதைப் பறிக்க ஆண்கள் நிலைமையைக் கையாளும் எண்ணற்ற வழக்குகள் உள்ளன. நம் சமூகத்தின் சமூக நெறிமுறைகள், பெண்கள் இந்த அநீதியைப் பற்றி பேசுவதை விட வாய் மூடிக்கொள்ள விரும்புகிறார்கள்; தன் குடும்ப உறுப்பினர்களால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகப் பேசுவதை விட அப்பெண் பசியுடன் இருப்பதையே விரும்புகிறாள்.

குர்ஆனின் அறிவுறுத்தல்கள் இருந்தபோதிலும், பொதுவாக, சகோதரிகள் மற்றும் மகள்கள் தங்கள் சொத்து உரிமைகளை மகிழ்ச்சியுடன் விட்டுக்கொடுத்து விடுகிறார்கள், இல்லையெனில் அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். சொத்தைப் பிரிக்கும் நேரத்தில், குடும்பத்தின் மகன்கள் தங்கள் சகோதரிகளுக்குத் தெரியாமல் ஆண் வாரிசுகளுக்கு இடையே எல்லாவற்றையும் பிரிப்பது பெரும்பாலும் நடக்கும். மகன்களுக்கு மட்டுமே சொத்துரிமை இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்; மகள்கள் அந்நியர்கள் என்றும் அவர்களின் கணவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும். அல்லது மகள்களின் திருமணத்தை நடத்த பெரும் தொகை செலவிடப்பட்டு வரதட்சணை கொடுக்கப்படுகிறது என்று ஆண்கள் வாதிடுகின்றனர்.

இதையும் படிங்க : நீட் 2023 : மாணவிகளின் உள்ளாடைகளை பரிசோதனை செய்த அவலம்.. ஆடையை மாற்ற சொன்னதாகவும் தகவல்

இந்த நாட்களில் அவர்களின் படிப்புக்கும் பணம் செலவழிக்கப்படுகிறது, இதன் விளைவாக பெண்களின் குடும்பத்திற்கு எந்தப் பயனும் இல்லை என்று ஆண்கள் கூறுகின்றனர். இன்னும் சில சகோதரர்கள் தங்கைக்கு அவள் கணவன் மற்றும் குழந்தைகளுடன் தாய்வீட்டிற்கு வரும்போது, தங்கைக்கு விருந்தளிக்க செலவழித்த தொகையை கணக்கிடுகிறார்கள். பணம் மரங்களில் காய்க்காது என்று இந்த ஆண்கள் வாதிடுகின்றனர். ஒருவேளை மகள்கள் சொத்தில் தங்கள் பங்கை எடுக்க வேண்டும் என்று கேட்டால், சகோதரர்களின் குடும்பம் அவர்களுடனான உறவை துண்டித்து விடுகின்றன.

இந்திய குடும்பங்களில், மகள்கள் தங்கள் தாய்வழி வீட்டில் உணர்ச்சி ரீதியான தொடர்பை கொண்டுள்ளனர், எனவே அவர்கள் தங்கள் சகோதரர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தங்கள் உறவைப் பேணுவதற்கான உரிமைகளை விட்டுவிட விரும்புகிறார்கள். அதைப் பற்றி பேசக்கூட வெட்கப்படுகிறாள்.

எவ்வாறாயினும், பணக்கார குடும்பங்களைச் சேர்ந்த பல முஸ்லீம்  பெண்கள் வருமானம் குறைவாக இருக்கும் குடும்பங்களில் திருமணம் செய்து கொள்கிறார்கள்; பெண்கள் பாடுபட வேண்டிய நிலை உள்ளது. சிலர் வீட்டில் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு வேலைக்குச் செல்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் ஒரு பெண் தன் பணக்காரப் பெற்றோர் விட்டுச் சென்ற சொத்தில் தனக்குப் பங்கு தேடினால், அதுவும் அவளுடைய சகோதரர்களால் அவளுக்கு மறுக்கப்படுகிறது. அந்த வகையில் சொத்துரிமை மறுக்கப்படும் 4 சகோதரிகளின் கதை இது, அவர்களின் பெற்றோர் சொத்தில் பெரும் பங்கை விட்டுவிட்டார்கள், ஆனால் அவர்களின் சகோதரர்கள் அவர்களுக்கு இந்த பங்கைக் கொடுக்க விரும்பவில்லை. உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் நடந்த சம்பவம் இது.

ஜெபுன்னிசா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 13 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். உ.பி., நொய்டாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கணவருடன் சேர்ந்து பணிபுரிகிறார். வாடகை வீட்டில் வசிக்கின்றனர். இருவரும் வேலைக்குச் செல்வதால், ஒரே மகளை நெருங்கிய உறவினரின் பராமரிப்பில் விட்டுச் சென்றுள்ளனர். குடும்பத்தின் பொருளாதார நிலை சரியில்லை என்பதால், கனத்த இதயத்துடன் தங்கள் மகளை உறவினரிடம் விட்டுச் சென்றதாக ஜெபுனிசா கூறுகிறார்.

மகளின் பராமரிப்பிற்காக மாதந்தோறும் உறவினருக்கு பணம் அனுப்பி வந்தனர். ஈத் அன்று, ஜெபுனிசா தனது மகளைச் சந்திக்கச் சென்றதாகக் கூறியபோது, குடும்பத்தின் அனைத்துக் குழந்தைகளும் புதிய ஆடைகளை அணிந்திருந்தபோது, தன் மகள் பழைய ஆடைகளை அணிந்திருந்ததைக் கண்டு வேதனையடைந்ததாக கூறினார். மேலும், மற்ற குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தபோது தன் மகள் வேலை செய்து வந்ததாகவும் கூறினார். ஆனால் தன் மகளை மீட்க எந்த வழியும் இல்லை என்று அவர் கண்ணீர் வடிக்கிறார்.

தன் தந்தையின் சொத்தில் தனக்குப் பங்கு கிடைத்தால் மட்டுமே தன் குடும்ப வாழ்க்கை மாறும் என்பதை உணர்ந்தார். தனது சகோதரிகளுடன் சேர்ந்து பல ஆண்டுகளாக தங்கள் பெற்றோரின் சொத்தில் தங்கள் சகோதரர்களிடம் பங்கு கேட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : எந்த சிறப்பு வகுப்பும் இல்லை.. யூ டியூப் வீடியோ மூலம் 2 ரயில்வே வேலைகளை பெற்ற இளைஞர்..

ஆரம்பத்தில், சகோதரர்கள் பேசாமல் இருந்தனர், ஆனால் இப்போது எந்த சொத்தும் சகோதரிகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறினார்கள். இந்த அநீதிக்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்ல பணத்திற்காக ஜெபுனிசா மிகவும் கஷ்டப்படுகிறார்.  மற்ற சகோதரிகளும் கிட்டத்தட்ட இதே  நிலையில் உள்ளனர். அவரது மற்றொரு சகோதரி ஷாஜியா மற்றும் அவரது கணவரும் கடுமையாக உழைக்கிறார்கள்.

தனது ஒரே குழந்தையான மகளுக்கு சிறந்த கல்வியைக் கொடுக்க ஆர்வமாக இருப்பதாக ஷாஜியா கூறுகிறார். வேறு வழியிருந்தால் சொத்தில் தன் பங்கைக் கேட்டிருக்க மாட்டேன் என்று சொல்கிறார். மேலும் “ சமீப காலமாக எனக்கு உடல்நிலை சரியில்லை; மேலும் எனது கணவருக்கும் கூட உடல்நிலை சரியில்லை. தனது வருமானத்தில் நல்ல பங்கை மருத்துவச் செலவுக்கும் சிகிச்சைக்கும் செலவிட வேண்டியுள்ளது. தன் பங்கு கிடைத்தால், சில செலவுகளைச் சமாளிக்க உதவும்.  குறைந்த பட்சம் அந்த பணத்தை தங்கள் மகளுக்கு நல்ல வாழ்க்கை கொடுக்க பயன்படுத்தலாம் என்கிறார்.

ஷாஜியாவின் கணவர், "எனக்கு பணத்தில் ஆர்வம் இல்லை, ஆனால் ஷாஜியா தனது பரம்பரைப் பங்கைப் பெற ஆர்வமாக உள்ளார்" என்று கூறுகிறார். இதேபோல், அவரது மூன்றாவது சகோதரி நக்மாவும் தனது குடும்பத்தை நடத்த வேலை செய்கிறார். அவளது கணவன் தினக்கூலி, சொற்ப வருமானம். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நக்மா கூறுகையில், தனது சகோதரர் மிகவும் பணக்காரர். பரம்பரைச் சொத்தில் தனக்குப் பங்கு வழங்கப்பட்டால், நக்மா ஒரு துணிக்கடையை தொடங்க விரும்புவதா கூறுகிறார்

அதே போல் நான்காவது சகோதரி ஷப்னத்தின் பொருளாதார நிலையும் சரியில்லை. இவரது கணவர் பீடித் தொழிற்சாலையில் பணிபுரிகிறார், அவரது சிறிய வருமானத்தில் குடும்பம் வாழ்ந்து வருகிறது. பெற்றோர் விட்டுச் சென்ற சொத்துக்களில் அனைத்து சகோதரிகளுக்கும் மூன்றில் ஒரு பங்கு இருப்பதாக ஷப்னம் கூறுகிறார். "அல்லா இந்த உரிமையை எங்களுக்கு வழங்கியுள்ளார், எனவே எங்களுக்கு எங்கள் பங்கு தேவை," என்று அவர் கூறுகிறார்.

சொத்தில் தனக்கு உரிய பங்கைக் கேட்பதால் மட்டுமே தன் சகோதரன் டனது உறவை முறித்துக் கொண்டாலும் கவலைப்படுவதில்லை என்று ஷப்னம் கூறுகிறார். "தங்கள் சகோதரிகளின் உரிமைகளைப் பறித்து அமைதியான வாழ்க்கை நடத்தும் இத்தகைய சகோதரர்களால் என்ன பயன்?" என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார். 

ஹரியானா மாநிலம் கர்னாலின் மூத்த வழக்கறிஞர் முகமது ரபிக் சௌஹான் கூறுகையில், மூதாதையர் சொத்து பறிக்கப்பட்ட சகோதரிகள் இந்திய வாரிசு சட்டம்-1925ன் கீழ் நீதிமன்றத்திற்குச் சென்று விண்ணப்பம் செய்யலாம். முஸ்லீம் மற்றும் இந்து வாரிசுரிமைச் சட்டங்களின் விதிகள் வேறுபட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்து வாரிசு விதிகள் குறியிடப்பட்டுள்ளன. அவர்களின் வாரிசு இந்து வாரிசு சட்டம்-1956 இன் கீழ் தீர்மானிக்கப்படுகிறது, அதேசமயம் முஸ்லிம்களின் வாரிசு விதிகள் குறியிடப்படவில்லை. இது குர்ஆன் மற்றும் ஹதீஸ் அதாவது நடைமுறையில் உள்ள மரபுகள் மற்றும் இந்திய வாரிசு சட்டம்-1925ன் கீழ் தீர்மானிக்கப்படலாம்.

இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் விருப்ப விதிகள் வேறு. சில நிபந்தனைகளுடன் உயில் செய்ய இந்துக்களுக்கு முழு உரிமை இருந்தாலும், ஒரு முஸ்லீம் தனது சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே தனது வாரிசுகளின் ஒப்புதலுடன் உயில் அளிக்க முடியும். இதில், உயில் படி சொத்து பங்கீடு செய்யப்படுகிறது. உயில் இல்லாத பட்சத்தில், வாரிசு விதிகளின்படி சொத்து பிரிக்கப்படுகிறது. இந்திய வாரிசுரிமைச் சட்டம்-1925-ன் கீழ், அனைத்து மதங்களையும் மனதில் வைத்து வாரிசுரிமைச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.

இந்த நான்கு சகோதரிகளைப் போல எத்தனை சகோதரிகள் மற்றும் மகள்களின் உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன என்பதே மிகப்பெரிய கேள்வி.

PREV
click me!

Recommended Stories

கணவனை கழற்றிவிட்டு ஏசி மெக்கானிக்கவுடன் சென்ற 25 வயது பெண்.. 8 மாதத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கைகாட்டுபவரே முதல்வர்..! ராகுல் காந்தியின் மாஸ்டர் ப்ளான்..! கதிகலங்கும் கதர் சட்டைகள்..!