Breaking: ஹெலிகாப்டர் மீது மோதிய கழுகு; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார்!!

Published : May 02, 2023, 01:21 PM ISTUpdated : May 02, 2023, 02:57 PM IST
Breaking: ஹெலிகாப்டர் மீது மோதிய கழுகு; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார்!!

சுருக்கம்

கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டரின் மீது கழுகு மோதியதில் கண்ணாடிகள் உடைந்தன.

கர்நாடக மாநிலம் ஜக்குரு விமான நிலையத்தில் இருந்து கோலராவின் முளுபாகிலுவுக்கு காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் சென்ற ஹெலிகாப்டர் மீது கழுகு மோதியது. இதில் கண்ணாடிகள் உடைந்து பத்திரமாக ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக சிவகுமார் தப்பினார்.

கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்திற்காக டி கே சிவக்குமார் பெங்களூருவில் இருந்து முல்பாகல் நோக்கிச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஹெலிகாப்டரில் சிவகுமாருடன் இருந்த ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம்களை திருப்திபடுத்த பஜ்ரங் தளத்துக்குத் தடையா? காங். அறிவிப்பு குறித்து அசாம் முதல்வர் சீற்றம்

கர்நாடகாவில் தேர்தல் நடக்கவிருப்பதால் தலைவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு விமானத்தில், ஹெலிகாப்டரில், காரில் என்று பேட்டி அளித்து வருகின்றனர். இதுபோன்றுதான் இன்று சிவகுமாரும் கன்னடா சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து சென்று கொண்டு இருந்தார். அப்போது கழுகு தாக்கியதில் ஹெலிகாப்டர் கண்ணாடி சுக்கு நூறாக சிதறியது. சுதாரித்துக் கொண்ட பைலட் ஹெலிகாப்டரை பெங்களூருவில் இருக்கும் ஹெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கினார்.

பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சிக்காக ரூ.830 கோடி செலவு.. ஆம் ஆத்மி தலைவர் மீது வழக்குப்பதிவு

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!