ஜெயலலிதா பரவாயில்லையாம்!!! - கர்நாடக அதிகாரி மனைவி வீட்டில் ரெய்டில் சிக்கிய 7000 சேலைகள்

Asianet News Tamil  
Published : Feb 28, 2017, 07:34 PM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
ஜெயலலிதா பரவாயில்லையாம்!!! - கர்நாடக அதிகாரி மனைவி வீட்டில் ரெய்டில் சிக்கிய 7000 சேலைகள்

சுருக்கம்

Jayalalithaas ok Karnataka officers wife caught in the raid on the home of 7000 sarees

கர்நாடக மாநிலத்தில் விற்பனை வரி உதவி ஆணையாளர் வீட்டில் 7000 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் விஸ்வேஸ்வர் நகரில் கரியப்பா கெர்னர் என்பவர் வசித்து வருகிறார். இவர் விற்பனை வரி உதவி ஆணையாளராக உள்ளார்.

கரியப்பா கெர்னர் லஞ்சம் வாங்குவதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில், கரியப்பா கெர்னர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவரது வீட்டில் இருந்து சுமார் 7000  சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஒவ்வொரு சேலையும் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

விர்ர்ர்ரென உயரும் தங்கத்தின் விலை..! உலகளவில் தாறுமாறாக உயர இதுதான் காரணம்..! எப்போது குறையும் தெரியுமா..?
காவி உடையில் சிங்கம்..! மோடி- யோகியை ஆதரிப்பதால் என் சமூகம் ஒதுக்குகிறது..! தௌகீர் அகமது வேதனை..!