ISIS : லிபியாவில் நடந்த முதல் தீவிரவாத தாக்குதல்.. கேரளாவை சேர்ந்த நபருக்கு தொடர்பா ? பரபரப்பு தகவல்!

By Raghupati RFirst Published Aug 22, 2022, 12:07 AM IST
Highlights

கேரளாவில் பிறந்த கிறிஸ்தவ இளைஞர் ஒருவரே இந்த தாக்குதலை நடத்தியது என்று தெரியவந்துள்ளது.

லிபியாவில் முதல் தாக்குதலை நடத்தியவர் ஒரு இந்தியாவை சேர்ந்த மலையாளி என்று ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் தி வாய்ஸ் ஆஃப் கோராசன் வெளியிட்டுள்ளது. கேரளாவில் பிறந்த கிறிஸ்தவ இளைஞர் ஒருவரே இந்த தாக்குதலை நடத்தியது என்று தெரியவந்துள்ளது. மத்திய கிழக்கில் உள்ள நாடுகளில் பணிபுரியும் போது, இஸ்லாம் மதத்திற்கு மாறி, பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்து பயங்கரவாத தாக்குதலை நடத்தினார்.

மேலும் செய்திகளுக்கு..யுபிஐ பணப்பரிமாற்ற சேவைக்கு கட்டணம் கிடையாது.. மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்!

ஆனால் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் தி வாய்ஸ் ஆஃப் கோராசன் அவரது பெயரையோ, சம்பவம் நடந்த ஆண்டையோ குறிப்பிடவில்லை. அவர் அபூபக்கர் அல்ஹித் என்ற பெயரில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ். புலனாய்வு அமைப்புகள் இதுதொடர்பான விசாரணையைத் தொடங்கியுள்ளன.

மேலும் செய்திகளுக்கு..மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ்.! மருத்துவ தம்பதியின் சூப்பர் ஐடியா !

click me!