டெல்லியில் விவசாயிகள் போராட்டம்... கட்டுக்கடங்காத கூட்டம்... தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைத்த போலீஸ்!

Oct 2, 2018, 12:16 PM IST

விவசாய கடன் தள்ளுபடி, பயிர் காப்பீடு உள்ளிட்டவை குறித்து, டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உத்தரபிரதேசம், காஸியாபாத் வழியாக டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள், பயிர் கடனை தள்ளுபடி செய்யும்படி மத்திய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கு பெற்றுள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்த, அவர்கள் மீது போலீசார் தண்ணீர் பீய்ச்சி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.