புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா சர்ச்சை.. காங்கிரஸ் எதிர்ப்புக்கு பின்னால் உள்ள உண்மையான காரணம் என்ன?

By Ramya sFirst Published May 25, 2023, 3:07 PM IST
Highlights

பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவது அனைவருக்கும் தெரிந்தது தான். பிரதமர் நரேந்திர மோடியும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளனர். எனினும், பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் இந்த விழாவை புறக்கணிக்க போவதாவும் எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

இதில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. ஆனால் காங்கிரஸ் ஏன் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது என்ற காரணத்தை பலரும் தேட ஆரம்பித்துள்ளனர். காங்கிரஸ் செயல்படும் விதம் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பல கடந்த கால சம்பவங்களை உதாரணமாக சொல்லலாம்.

இதையும் படிங்க : பிரதமர் மோடி வரலாற்றை திருத்துகிறார்; திருத்தி எழுதவில்லை; செங்கோல் குறித்து டுவிட்டரில் பெருகும் ஆதரவு!!

1927 இல், தற்போதைய பாராளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவில் மற்ற காங்கிரஸ் தலைவர்களுடன் மோதிலால் நேரு கலந்து கொண்டார். இந்த கட்டிடம் அப்போதைய பிரிட்டிஷ் ஆட்சியின் வைஸ்ராய் லார்ட் இர்வின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு எதிராக காங்கிரஸ் பல வாதங்களை முன்வைத்திருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை. காலனித்துவத்தை தொடரும் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க மாட்டோம் என்று கூறவில்லை.

அப்போதைய நாடாளுமன்ற முறையின் உண்மையான அரசியல் சாசனத் தலைவர் பிரிட்டிஷ் அரசரே தவிர வைஸ்ராய் அல்ல என்றும் காங்கிரஸால் சொல்ல முடியும். பாராளுமன்ற கட்டிடத்தை வைஸ்ராய் ஏன் திறந்து வைக்கிறார்? மாறாக பிரிட்டிஷ் அரசர் திறந்து வைக்க வேண்டும்.. அப்போதுதான் கலந்துகொள்வோம் என்று காங்கிரஸ் அபத்தமான கூற்றுக்கள் எதையும் கூறவில்லை. ஆனால், பிரதமர் மோடிக்கு மட்டும் ஏன் இப்படி காங்கிரஸ் அபத்தமாக பேசுகிறது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் காங்கிரஸின் பார்வையில் பிரிட்டிஷ் ஏஜெண்டுக்குக் குறைவானவரா? ஆனால் இங்கு காங்கிரஸ் கூறுவது உண்மையான காரணமல்ல.. இதற்கு இரண்டு முக்கிய காரணங்களைச் சொல்கிறார்கள். ஒன்று பிரதமர் மோடி மீதான தீராத வெறுப்பு.. மற்றொன்று இந்தியா காந்தி குடும்பத்தின் சொத்து என்றும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த எந்த செயலையும் யார் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம் என்ற உரிமை உணர்வு.

அந்த அடிப்படையில் தான் காங்கிரஸ் கடந்த காலங்களில் என்ன தர்க்கத்துடன் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 2017ல் GST கொண்டு வர நள்ளிரவு கூட்டத்தை காங்கிரஸ் புறக்கணித்தது ஏன்? குடியரசுத் தலைவர், பிரதமர் இருவரும் இருந்தபோது.. அப்போது காங்கிரஸ் கட்சியின் லாஜிக் என்ன என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டுகின்றன.

சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு சோனியா காந்தி அடித்தளம் அமைப்பதை எந்த தர்க்கம் ஆதரிக்கிறது என்பதையும் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். காங்கிரஸ் இப்போது சொல்லும் லாஜிக் படி.. சத்தீஸ்கர் ஆளுநர் அடிக்கல் நாட்டி இருக்க வேண்டும் ஆனால் கவர்னரைத் தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அடிக்கல் நாட்டலாம். ஆனால் சோனியா காந்தி எந்த அரசியலமைப்பு அந்தஸ்தும் இல்லாமல் சட்டசபை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார் என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

காங்கிரஸின் ஒவ்வொரு செயலும் காந்தி குடும்பத்தைச் சுற்றியே இருக்கிறது என்பதற்குப் பல உதாரணங்கள் சொல்லப்படுகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு.. புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவுக்குப் பின்னால் உள்ள பிரச்சனை, அதை குடியரசுத் தலைவர் திறந்து வைப்பதா?என்று கேட்டால் இல்லை என்பதே பதில். பிரதமர் மோடி மீது வெறுப்பு மற்றும் காந்தி குடும்பத்தின் உரிமை என இரண்டு உணர்வுகள் காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது..

இதையும் படிங்க :  நாட்டின் புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.. எங்கிருந்து எங்கு செல்கிறது?

click me!