திருப்பதி கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது பயங்கரம்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி!

Published : Jul 10, 2023, 08:11 AM ISTUpdated : Jul 10, 2023, 08:15 AM IST
திருப்பதி கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது பயங்கரம்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி!

சுருக்கம்

திருமலை ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் மீண்டும் தங்கள் சொந்த ஊரான விஜயவாடாவிற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். 

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்த போது கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

திருமலை ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் மீண்டும் தங்கள் சொந்த ஊரான விஜயவாடாவிற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, காளஹஸ்தியை நோக்கி  கார் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மோதியது. இதில், காரில் பயணித்த 7 பேரில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். 

இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: அடேங்கப்பா.. சென்னையில் இன்று இவ்வளவு இடங்களில் மின்தடையா?

உடனே படுகாயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த 6 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க;-  Delhi Rains : மஞ்சள் அலெர்ட்: டெல்லியை விடாமல் துரத்தும் கனமழை.. வெள்ளத்தால் சிக்கித்தவிக்கும் நகரங்கள்

விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்து காரில் ஊர் திரும்பும் போது விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!