பணியை சிறப்பாக தொடங்கிய ஆதித்யா எல்1 விண்கலம்.. இஸ்ரோ சொன்ன முக்கிய அப்டேட்..

By Ramya sFirst Published Dec 2, 2023, 4:21 PM IST
Highlights

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம் குறித்து இஸ்ரோ முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

சூரியனை ஆய்வு செய்ய கடந்த செப்டம்பர் 2-ம் தேதி ஆதித்யா எல்1 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இது 125 நாட்கள் பயணம் செய்து, 15 லட்சம் கி.மீ தொலைவில் உள லெக்ராஞ்சியன் புள்ளியை சென்றடையும் என்று இஸ்ரோ ஏற்கனவே அறிவித்திருந்தது. அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆதித்யா எல்1 விண்கலம் குறித்து இஸ்ரோ முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆதித்யா-எல்1 செயற்கைக்கோளில் ஆதித்யா சூரியக் காற்றின் துகள் பரிசோதனை (ASPEX) கருவி தனது செயல்பாட்டைத் தொடங்கி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ASPEX சூரிய காற்று அயன் ஸ்பெக்ட்ரோமீட்டர் (சுவிஸ்) மற்றும் சூப்பர் தெர்மல் மற்றும் எனர்ஜிடிக் பார்ட்டிகல் ஸ்பெக்ட்ரோமீட்டர்  என 2 கருவிகளை உள்ளடியது. இதில் முதல் கருவியானது செப்டம்பர் 10, 2023 இல் செயல்படத் தொடங்கப்பட்ட நிலையில், ஸ்விஸ் கருவி நவம்பர் 2, 2023 இல் செயல்படுத்தப்பட்டு, சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஸ்விஸ் கருவி 360 டிகிரி பார்வைக் களத்துடன் இரண்டு சென்சார் அலகுகளைப் பயன்படுத்தி, செங்குத்தாக விமானங்களில் இயங்குகிறது. மேலும் இந்த கருவியானது சூரியக் காற்று அயனிகளை, முதன்மையாக புரோட்டான்கள் மற்றும் ஆல்பா துகள்களை வெற்றிகரமாக அளந்துள்ளது.

ஸ்விஸ் கருவியின் திசை திறன்கள் சூரிய காற்றின் புரோட்டான்கள் மற்றும் ஆல்பாக்களின் துல்லியமான அளவீடுகளை செயல்படுத்துகின்றன, சூரியக் காற்றின் பண்புகள், அடிப்படை செயல்முறைகள் மற்றும் பூமியில் அவற்றின் தாக்கம் பற்றிய நீண்டகால கேள்விகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன. எனவே இது பூமியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று கணிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இது விண்வெளி வானிலை ஆய்வுகளுக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

முன்னதாக கடந்த வாரம், இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத் பேசியபோது, ஆதித்யா எல்1 விண்கலம் அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருவதாகவும், எல்1 புள்ளியில் நுழைவதற்கான செயல்முறை ஜனவரி 7, 2024க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோசமான வானிலை.. டெல்லி ஏர்போர்ட்டில் தரையிறங்க முடியவில்லை.. திருப்பிவிடப்பட்ட 20 விமானங்கள் - என்ன நடந்தது?

இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்1 விண்கலம் பயணிக்க உள்ள மொத்த தூரம் 1.5 மில்லியன் கிலோ மீட்டர் ஆகும்.  இந்த இலக்கை அடைய 4 மாதங்கள் ஆகும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனை பற்றி ஆய்வு செய்ய விஇஎல்சி (Visible Emission Line Coronagraph) என்ற தொலைநோக்கி, எஸ்யுஐடி ( Solar Ultraviolet Imaging Telescope) என்ற தொலைநோக்கி, ஏ ஸ்பெக்ஸ் (Aditya Solar wind Particle Experiment) என்ற சூரிய காற்றின் தன்மைகளை ஆய்வு செய்யும் கருவி, சூரிய சக்தியை ஆராயும் பிஏபிஏ ( Plasma Analyser Package for Aditya ), சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள் மற்றும் வெப்பத்தை கண்காணிக்கும் சோலெக்ஸ் ( Solar Low Energy X-ray Spectrometer) உள்ளிட்ட முக்கிய கருவிகள் ஆதித்யா எல்1 –ல் உள்ளன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமே சூரியனை ஆராய பிரத்யேக செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளன. அதில், கடந்த 2017ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட அமெரிக்காவின் பார்க்கர் சோலார் ப்ரோப் செயற்கைக்கோள் அதிகபட்சமாக, புவியிலிருந்து 8.5 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் சென்று சூரியனை ஆய்வு செய்து உள்ளது. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் சூரியனை ஆய்வு செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!