கர்நாடகாவில் 521 பேருக்கு வெப்பம் தொடர்பான நோய் பாதிப்பு.. ஆனால்.. மாநில அரசு தகவல்..

Published : Apr 06, 2024, 08:33 AM IST
கர்நாடகாவில் 521 பேருக்கு வெப்பம் தொடர்பான நோய் பாதிப்பு.. ஆனால்..  மாநில அரசு  தகவல்..

சுருக்கம்

கர்நாடகாவில் கடந்த மூன்று மாதங்களில் 521 பேருக்கு வெப்பம் தொடர்பான நோய்கள் பதிவாகியுள்ளன என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் கடந்த மூன்று மாதங்களில் 521 பேருக்கு வெப்பம் தொடர்பான நோய்கள் பதிவாகியுள்ளன, ஆனால் வெப்ப பக்கவாதம் மற்றும் அது தொடர்பான இறப்புகள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 342 பேருக்கு கடும் வெப்பத்தால் ஏற்படும் தோல் அலர்ஜி, 121 பேருக்கு வெப்ப பிடிப்புகள் மற்றும் 58 வெப்ப சோர்வு வழக்குகள் அடங்கும்.

மேலும் பேசிய அவர் “ இரண்டு மரணங்கள் வெப்ப பக்கவாதத்துடன் தொடர்புடையதாக முதலில் சந்தேகிக்கப்பட்டது, ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கைகள் அதை நிராகரித்தன என்று சுகாதார மற்றும் குடும்ப நல சேவைகள் ஆணையர் டி ரந்தீப் தெரிவித்தார். “கலபுர்கியில் ஒரு மரணம் கார்டியாக் டம்போனேட் எனப்படும் இதயக் கோளாறு காரணமாகவும், மற்றொன்று பாகல்கோட்டில் மாரடைப்பு காரணமாகவும் நிகழ்ந்தது. எனவே, இந்த மரணங்கள் வெப்ப பக்கவாதம் காரணமாக ஏற்பட்டது நேரடியாகச் சொல்ல முடியாது” என்று கூறினார்..

Summer Drinks : கோடையில் குளு குளுனு இருக்க இனி கூல் டிரிங்க்ஸ் குடிக்காதீங்க.. "இத' மட்டும் குடிச்சா போதும்!

மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள், குறிப்பாக வட மாவட்டங்களில் உள்ளவர்கள், இதுபோன்ற வெப்பம் தொடர்பான நோய்களை (HRI) உன்னிப்பாகக் கண்காணிக்கவும், ஒருங்கிணைந்த சுகாதார தகவல் இணையதளத்தில் (IHIP) புகாரளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்..

மேலும் பேசிய அவர் “ அனைத்து மாவட்ட மருத்துவமனைகளுக்கும் வெப்பப் பக்கவாதம் மேலாண்மைக்கு 5 படுக்கைகள் அமைக்கவும், வெப்பம் தொடர்பான நோய்க்களுக்கு சிகிச்சையளிக்க தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு வழக்கையும் கவனக்குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று நாங்கள் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்." என்றும் கூறினார்.

காலரா பரவல் பற்றிய கவலைகள் குறித்து பேசிய ரன்தீப், கடுமையான வயிற்றுப்போக்கு நோய்களை காலராவின் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் என்று தவறாகப் புகாரளித்து பீதியை உருவாக்க வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தினார். இதுகுறித்து பேசிய அவர் "ஒருவருக்கு காலரா பரிசோதனை செய்ய வேண்டும் என்றால், அவர்களின் மலத்தை பரிசோதிக்க வேண்டும். உடனடியாக முடிவுகள் வராது," என்று அவர் கூறினார்.

கடந்த 3 மாதங்களில், 6 காலரா பாதிப்புகள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளன. ஒரு தனியார் மருத்துவமனையின் மருத்துவர் ஒரு அறிக்கை, நகரத்தில் பாதிப்புகள் 50% அதிகரித்துள்ளது என்றும், ஒவ்வொரு நாளும் 20-30 நோயாளிகள் வருகிறார்கள் என்று கூறினார். ஆனால் அந்த மருத்துவமனையின் பதிவேடுகளை நாங்கள் சரிபார்த்தபோது ஒரு நோயாளியை கூட நாங்கள் கண்டறியவில்லை," என்று அவர் கூறினார்.

Heatwave : சுட்டெரிக்கும் வெயில்.. மக்களே கண்டிப்பா இதை எல்லாம் செய்யாதீங்க.. மத்திய அரசு அட்வைஸ்...

மேலும் பேசிய அவர் “ பெங்களூருவில் உள்ள பாதிப்புகளை சுகாதாரத் துறை கண்காணித்து, ஒரு பகுதியில் பாதிப்பு அதிகரித்தால் விசாரணைக் குழுவை அனுப்பும். சுகாதாரத் துறையின் தரவுகளின்படி, பெங்களூரு நகரம் மூன்று பாதிப்புகளை கண்டுள்ளது, அதே நேரத்தில் பெங்களூரு நகர்ப்புற மாவட்டத்தில் இரண்டு பாதிப்புகள் மற்றும் ராமநகரில் ஒரு உறுதிப்படுத்தப்பட்ட காலரா பாதிப்பு இந்த ஆண்டு ஜனவரி மாதம் கண்டறியப்பட்டது.” என்று தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!