உலக நுரையீரல் புற்றுநோய் தினம் 2023: நுரையீரல் புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகள் என்னென்ன?

Published : Aug 01, 2023, 07:25 AM ISTUpdated : Aug 01, 2023, 08:00 AM IST
உலக நுரையீரல் புற்றுநோய் தினம் 2023:  நுரையீரல் புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகள் என்னென்ன?

சுருக்கம்

உலக நுரையீரல் புற்றுநோய் தினம் 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது,  .

கொடிய புற்றுநோய்களில் ஒன்றான நுரையீரல் புற்றுநோய் முக்கியமான சுவாச உறுப்புகளில் வளர்கிறது. நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாய் புற்றுநோய்தான் பெரும்பாலான இறப்புகளுக்கு காரணம் நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. இந்த நுரையீரல் புற்றுநோய் புகைப்பிடிப்பவர்களை அதிகம் பாதிக்கிறது. மற்றும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் 80% க்கும் அதிகமானோர் அடிக்கடி புகைபிடிக்கிறார்கள் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். புகை, காற்று மாசுபாடு, நுரையீரல் புற்றுநோயின் குடும்ப வரலாறு ஆகியவை மற்ற ஆபத்து காரணிகளாக இருக்கலாம். தொடர் இருமல், சுவாசிப்பதில் சிரமம், இருமல் ரத்தம், நெஞ்சு வலி, சோர்வு இவை அனைத்தும் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகளாகும்.

உலக நுரையீரல் புற்றுநோய் தினம்

உலக நுரையீரல் புற்றுநோய் தினம் 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது,  இந்தகொடிய நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அது பற்றிய கூடுதல் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

உலக நுரையீரல் புற்றுநோய் தினத்தின் வரலாறு

உலக நுரையீரல் புற்றுநோய் தினத்திற்கான பிரச்சாரம் 2012 ஆம் ஆண்டில் கவனத்தை ஈர்த்தது. நுரையீரல் புற்றுநோயைப் பற்றிய ஆய்வுக்கான சர்வதேச சங்கம் மற்றும் அமெரிக்க மார்பு மருத்துவர்களின் கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்து சர்வதேச சுவாச சங்கங்களின் மன்றம் இந்த பிரச்சாரத்தை ஏற்பாடு செய்தது. அப்போது முதல், நுரையீரல் புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்க தொடங்கியது, இதில் பெரும்பாலானவை நுரையீரல் புற்றுநோயின் மற்ற அறிகுறிகளுடன் 3 வாரங்களுக்கும் மேலாக நீடிக்கும் இருமல் பற்றிய விழிப்புணர்வை மையமாகக் கொண்டது.

உலக நுரையீரல் புற்றுநோய் தினத்தின் முக்கியத்துவம்

இந்தியாவில், புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கை 1.46 மில்லியனிலிருந்து 2025 இல் 1.57 மில்லியனாக அதிகரிக்கலாம். இதில் ஆண்களில் நுரையீரல் புற்றுநோயும் பெண்களில் மார்பக புற்றுநோயும் ஆபத்து காரணியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. புற்றுநோய் உயிரணுக்களின் தோற்றத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படும். எனவே கொடிய புற்றுநோயாக கருதப்படும் நுரையீரல் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்கு ஒரு நாளை ஒதுக்குவது முக்கியம், இதனால் ஆரம்ப கட்டத்தில் அதைக் கண்டறிய முடியும்.

நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள்

"நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள் பொதுவாக ஆரம்ப நிலைகளில் கண்டறியப்படாமல் இருக்கலாம். எனவே, 2 வாரங்களுக்கு மேல் தொடர் இருமல், நாள்பட்ட இருமல் போன்ற சில அறிகுறிகள் தோன்றினால், மருத்துவரை அணுகுவது நல்லது. இருமும் போது ரத்தம் சுவாசிப்பதில் சிரமம், மார்பு வலி, மூச்சுத்திணறல், கரகரப்பு, விவரிக்க முடியாத எடை இழப்பு, எலும்பு / மூட்டு வலி, சோர்வு, தலைவலி, முகம் அல்லது கைகளில் வீக்கம் ஆகியவை அதன் அறிகுறிகளில் அடங்கும்.

புற்றுநோயில் நுரையீரல் புற்றுநோய் சிகிச்சையில் பல்வேறு பிறழ்வுகள் மற்றும் அவற்றின் பாதைகளை அடையாளம் கண்டு, பாதையை குறிவைப்பதன் மூலம் நாம் நோய்ப் பரவலை தடுக்க முடியும், அதன் மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு சில- நுரையீரலில் கண்டறியப்பட்ட பொதுவான மரபணு மாற்றங்கள் புற்றுநோய் EGFR, KRAS மற்றும் ALK மரபணுக்களில் உள்ளது. EGFR புரதத்தின் பிறழ்ந்த வடிவங்களை இலக்காகக் கொண்ட முதல் சிகிச்சை முறைகள் சிறிய அல்லாத உயிரணு நுரையீரல் புற்றுநோயால் (NSCLC) பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சாப்பிட்ட பிறகு நடப்பதால் பல நோய்களை தடுக்கலாம்.. எத்தனை அடிகள் நடக்க வேண்டும்?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Exercises For Joint Pain : மூட்டு வலி அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி!! ஒரே வாரத்தில் நிவாரணம்; ஒரே ஒரு பயிற்சி போதும்
Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!