கம்மியா தண்ணீர் குடிக்கிறீங்களா? டேஞ்சரான பழக்கம்

Published : Jun 18, 2025, 09:51 AM IST
7 reasons to drink water first thing in the morning to start your healthy day

சுருக்கம்

நாம் தினமும் குறைவாக தண்ணீர் குறைத்தால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நல்ல ஆரோக்கியத்திற்கு நீர் இன்றியமையாதது. உண்மையில் நீர் எல்லாவற்றிற்கும் உதவுகிறது. மேலும் மனிதர்களாகிய நாம் சுமார் 60 சதவீதம் தண்ணீரால் ஆனவர்கள். நம்முடைய உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பு, செல் மற்றும் திசுக்கள் சரியாக செயல்பட அது பயன்படுத்தப்படுகின்றன. அதனால் தான் ஒவ்வொரு நாளும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம் என்று சொல்லப்படுகிறது.

தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். தண்ணீர் உங்களை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும் என்று நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம். ஆனால் சில உணவுகளும் உங்கள் நீரேற்ற அளவை அதிகரிக்க உதவும். வெள்ளரிக்காய், தர்பூசணி, தக்காளி, முலாம்பழம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் இதில் அடங்கும். ஆனாலும் நம்மில் பலர் தினமும் குறைவான அளவில் தண்ணீர் குடிக்கிறார்கள். அதற்கு பதிலாக இனிப்பு பானங்கள் மற்றும் மது பானங்கள் போன்ற நீரிழப்பு பானங்களை அதிகமாக குடிக்க விரும்புகிறார்கள். ஆனால், அவை உடலின் நீரேற்றத்தை அகற்றிவிடும். சரி இப்போது தினமும் குறைவாக தண்ணீர் குடித்தால் உடலுக்கு என்ன நடக்கும்? நீங்கள் அனுபவிக்க கூடிய சில பக்க விளைவுகள் இங்கே.

தினமும் குறைவாக தண்ணீர் ஏன் குடிக்க கூடாது?

தினமும் குறைவாக தண்ணீர் குடித்தால் என்ன ஆகப்போகிறது என்று நீங்கள் அசால்டாக இருகாதீர்கள். ஏனெனில், அது பல உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். முக்கியமாக குறைவாக தண்ணீர் குடிப்பது சிறுநீர் பாதையில் கற்கள் உருவாகுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். ஒருவேளை கற்களை அகற்றினாலும் மீண்டும் வராமல் தடுக்க தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். சிறுநீரை வெளியேற்ற சுமார் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் தண்ணீர் குறைவாக குடித்தால் உடலில் உள்ள கழிவுகள் அடர்த்தி என சிறுநீரகமாக வெளியேறும் அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இது தவிர போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் சிறுநீர் அடிக்கடி வெளியேறாமல் உடலில் நச்சுக்கள் தேங்கி இருக்கும். இதனால் சிறுநீர் பாதை தொற்றுக்கள் ஏற்படும்.

தினமும் குறைவாக தண்ணீர் குடித்தால் ஏற்படும் பக்க விளைவுகள்:

1. குறைந்த ஆற்றல்

நீங்கள் தினமும் குறைவாக தண்ணீர் குடிக்கிறீர்கள் என்றால் உங்கள் ஆற்றல் மட்டும் குறைவதை நீங்கள் உணரலாம். அதுவும் குறிப்பாக நீங்கள் பகலில் மிக குறைவான அளவில் தண்ணீர் குடித்தால் உங்களால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியாமல் போகும். மிகவும் சோர்வாக உணரலாம். எனவே நாள் முழுவதும் தொடர்ந்து தண்ணீர் குடிக்க நினைவூட்ட ஒரு தண்ணீர் பாட்டிலை உங்களது கையில் எப்போதும் வைத்திருங்கள்.

2. செரிமான கோளாறுகள்:

தினமும் குறைந்த அளவில் தண்ணீர் குடிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். ஏனெனில் தண்ணீர் தான் உணவு போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், உணவு ஜீரணிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் செரிமான பிரச்சனை உருவாகின்றது.

3. உடலில் வெப்பம் அதிகரிக்கும்;

நீங்கள் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடலில் நீரிழிப்பை ஏற்படுத்தும். இதன் விளைவாக உடல் வெப்பநிலையானது சீர்குலைந்துவிடும். இதனால் உடலில் வெப்பம் அதிகரிக்கும்.

4. மனநிலை பாதிப்பு:

நீரிழப்பு உங்களை எரிச்சல் அடைய செய்யலாம். 2019 ஆம் ஆண்டு நியூட்ரிஷன்ஸ் இதழில் வெளிவந்த தகவலின் படி, கோபம், விரோதம், குழப்பம், மனசோர்வு மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளுக்கு 1 சதவீதம் நீச்சத்து குறைவால் அதிகரிக்கும் என்று கூறுகின்றது. எனவே அடுத்த முறை நீங்கள் சோர்வாகவோ அல்லது எரிச்சலாகவோ உணர்ந்தாள் ஒரு கிளாஸ் தண்ணீர் உடனே குடியுங்கள்.

5. மெதுவான வளர்ச்சிதை மாற்றம்:

உடலில் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே நீங்கள் நீரிழிப்புடன் இருந்தால் உங்கள் வளர்ச்சியை மாற்றம் இயற்கையாகவே குறைந்து விடும். அதுமட்டுமின்றி உங்கள் ஆற்றல் மட்டங்களும் குறைந்து விடும். ஆகவே, உங்கள் உடல் சரியன செயல்பாட்டிற்கு நீரேற்றுமாக இருப்பது மிகவும் அவசியம்.

6. தலைவலி மற்றும் சோர்வு:

உங்கள் மூளைக்கு தேவையான தண்ணீர் கிடைக்காத போது அது தலைவலி மற்றும் சோர்வுக்கு வழி வகுக்கும் என்று 2021 ஆம் ஆண்டு ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. ஆகவே நீங்கள் தலைவலியாகவோ அல்லது சோர்வாகவோ உணர்ந்தால் சிறிதளவு தண்ணீர் குடித்துவிட்டு ஓய்வெடுங்கள்.

இவர்கள் கவனமாக இருக்க வேண்டும்;

இதய நோய் சர்க்கரை நோய், சிறுநீரக செயலிழப்பு கால்களில் வீக்கம் ஆகியோர் அதிகமாக தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் இத்தகையவர்களுக்கு உடலில் அதிக நீர் சேர்ந்தால் அது ஆபத்தை ஏற்படுத்தும்.

அதுபோல 3 வயதிற்கும் குறைவான குழந்தைகள் மற்றும் 70 வயது கடந்தவர்களுக்கு தாக உணர்வு குறைவாகவே இருக்கும். எனவே இத்தகையவர்களுக்கு தாகம் எடுப்பதற்கு முன்பாகவே அவர்களுக்கு தண்ணீர் கொடுப்பது மிகவும் அவசியம். இல்லையெனில் அவர்களது உடலில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் ரத்த அழுத்தம் குறையும் அபாயம் ஏற்படும்.

நிபுணர்கள் சொல்வது என்ன?

நிபுணர்களின் கூற்றுப்படி, தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஏனெனில் தண்ணீர் தான் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், சிறுநீரகங்கள் திறம்பட செயல்படவும் பெரிதும் உதவுகின்றது. மேலும் தண்ணீர் தான் உடல் எடையை குறைப்பதற்கும், சருமத்தை ஆரோக்கியமாக மேம்படுத்துவதற்கும் துணைபுரிகின்றது. ஆகவே காலையில் டீ அல்லது காபிக்கு முன்பாக ஒரு கிளாஸ் தண்ணீர் குடியுங்கள். அதுவும் சூடான நீர் குடிப்பது செரிமானத்திற்கும் வளர்ச்சிதை மாற்றத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
Skincare Routine : அழகின் உச்சத்தைத் தொட இந்த '6' பழக்கங்கள் போதும்; உங்களை பாக்குறவங்க அசந்துடுவாங்க!!