** உடலில் ஏற்படும் பல்வேறு வலிகளுக்கும் நிவாரணம் தரக்கூடிய வகையில் மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
** எனினும் அமெரிக்காவில் Opioid எனப்படும் மாத்திரையும் வலி நிவாரணியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
** இந்த மாத்திரையினை அளவுக்கு அதிகமாக உள்ளெடுப்பதால் நாள்தோறும் 90 பேர் அமெரிக்காவில் மரணிப்பதாக ஆய்வு தகவல்கள் கூறுகின்றன.
** இந்நிலையில் இப் பிரச்சினைக்கு சற்று ஆறுதல் தரும் விதமாக விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
** அதாவது கடலில் வாழும் Conus regius எனப்படும் சிறிய வகை நத்தையின் நச்சுப் பதார்த்தமானது வலி நிவாரணியாக செயற்படக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது.
** இதனை Opioid மாத்திரைக்கு பதிலாக பயன்படுத்த முடியும் என குறித்த விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
** மேலும் இவ் வகை நத்தைகள் கரீபியன் கடற்பகுதிகளிலேயே அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.