கோச்சிக்காமல் படிங்க கோவைக்காயில் அடங்கி இருக்கும் மருத்துவ பண்புகளை…

 
Published : Jun 13, 2017, 01:18 PM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
கோச்சிக்காமல் படிங்க கோவைக்காயில் அடங்கி இருக்கும் மருத்துவ பண்புகளை…

சுருக்கம்

Medical benefits of ivy guard

 

கோவைக் கொடி சாலையோரத்தில் மரங்களில் படர்ந்து இருக்கும்.

வெள்ளரி இனத்தை சேர்ந்த இதன் கனிகள் சிவந்து இருக்கும். வெண்மையான பூக்களை கொண்டது.

1.. தோல்நோய்களை குணமாக்க கூடியதும், சர்க்கரை நோய்க்கு மருந்தாக அமைவதும், வாய் மற்றும் வயிற்று புண்களை ஆற்றும் தன்மை உடையதும், அலர்ஜியை போக்க கூடியதும், அரிப்பு, தடிப்பை சரிசெய்ய கூடியதுமானது கோவைக்காய்.

2.. கோவைச் செடி சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. கோவைக்காயை உணவாக சாப்பிடுவதாலும், மேல்பூச்சாக பயன்படுத்துவதாலும் பல்வேறு நோய்கள் குணமாகிறது. தோல்நோயை போக்குகிறது. வியர்வையை பெருக்க கூடியதும், எரிச்சலை தணிக்கும் தன்மையை கொண்டது.

3.. கோவை இலையை பயன்படுத்தி சர்க்கரை நோயாளிக்களுக்கான மருந்து தயாரிக்கலாம். நீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இந்த நீரில் கோவை இலைகளை 10 நிமிடம் வரை ஊறவைத்து எடுக்கவும். இதை பசையாக்கி சாப்பிடலாம். 5 முதல் 10 இலைகள் வரை எடுத்துக்கொள்ளலாம். இது சர்க்கரையின் அளவை குறைக்கும்.

4.. கோவை கொடியின் இலைகள், காய்கள், பூக்கள் ஆகியவை மருத்துவ குணங்களை கொண்டது. பல்வேறு நன்மைகளை கொண்ட இது, புண்கள், கேன்சரை குணப்படுத்தும். சொரி, சிரங்கு, குஷ்டம் போன்ற தோல் பிரச்னை உள்ளவர்கள் கோவைக்காயை சாப்பிட்டு வந்தால் சரியாகும்.

5.. கோவை பழத்தை பயன்படுத்தி அலர்ஜிக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு வேளைக்கு 2 பழம் எடுத்துக்கொள்ளலாம். பழத்தை மசித்து, அதனுடன் உப்பு, கால் ஸ்பூன் சீரகம் சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டிய பின்னர் 50 மிலி அளவுக்கு பருகலாம். இது, அலர்ஜியினால் தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பை போக்கும். பசியின்மை, சுவையின்மை போக்கும். பசியை நன்றாக தூண்டும்.

6.. கோவைக்காய் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. நுண்கிருமிகளை அழிக்க கூடியது. நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. கோவைக்காயை மென்று சாப்பிட்டால் வாய் மற்றும் தொண்டை புண் சரியாகும்.

7.. பூக்களை பயன்படுத்தி தோல் வியாதிகள், புண்களை ஆற்றக் கூடிய மேல்பூச்சு தயாரிக்கலாம். 50 மிலி தேங்காய் எண்ணெயில், 30 பூக்கள் வரை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்ச வேண்டும். பூக்கள் பொரிந்து மொறுமொறுவென்று வரும்போது எடுக்கவும். இந்த தைலத்தை பூசினால் தொழுநோய், தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு ஆகியவை குணமாகும்.
 

8.. கோவைக்கொடி ஈரல் நோய்களுக்கு மருந்தாகிறது. சொரியாசிஸ், தோல்நோய்களுக்கு உள் மருந்தாகவும், மேல்பூச்சாகவும் பயன்படுகிறது. இது உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

Papaya Face Pack : பனியால் முகம் வறட்சி ஆகுதா? நீரேற்றமாக வைக்கும் 'பப்பாளி' ஃபேஸ் பேக்!
Aloe Vera For Dandruff : பொடுகை நிரந்தரமாக நீக்க 'கற்றாழை' ஜெல்லை இந்த 1 பொருளுடன் கலந்து யூஸ் பண்ணுங்க