சமையலறையில் இருக்கும் பூண்டு, எந்தெந்த வியாதிகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது என்பது குறித்து தெளிவாக காண்போம்.
நம் வீட்டின் சமையலறையில் இருக்கும் சில பொருட்களை கொண்டே உடலில் உண்டாகும் பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும். அந்த அளவிற்கு சமையலறையில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை. சீரகம், சோம்பு, வெந்தயம், பூண்டு, மிளகு, கிராம்பு, ஏலக்காய் என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். அவ்வகையில் சமையலறையில் இருக்கும் பூண்டு, எந்தெந்த வியாதிகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது என்பது குறித்து தெளிவாக காண்போம்.
பூண்டு தண்ணீர்
சமையலில் அதிகளவில் பயன்படுத்தப்படும் உணவுப்பொருள் பூண்டு. இதில் பல்வேறு நோய்களை தீர்ப்பதற்கான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. பூண்டை சமைத்து உண்பது மற்றும் பச்சையாக அப்படியே உணவில் சேர்த்து சாப்பிடுவதை காட்டிலும், பூண்டை தண்ணீரில் சேர்த்து பானமாக குடிப்பதால் அதிக பலனைப் பெற முடியும். இரண்டு பூண்டு பல்லுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து, தினந்தோறும் காலையில் குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்து வந்தால் மாரடைப்பு, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் குணமாகும்.
Fenugreek spinach: சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு: இன்சுலின் அளவை அதிகரிக்க இந்த ஒரு கீரை போதும்!
பூண்டு தண்ணீரின் நன்மைகள்