Fruits: பழங்களை சாப்பிடும் போது தப்பித் தவறிக் கூட இந்த தப்ப செய்யாதிங்க!

By Dinesh TGFirst Published Dec 10, 2022, 4:05 PM IST
Highlights

பழங்களில் இருந்து கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை நம்மால் எளிதாக பெற முடியும். இப்போது நாம் செய்யும் தவறுகள் என்ன என்பதையும், அதனை மாற்றிக் கொள்வது பற்றியும் தெரிந்து கொள்வோம்.

நாம் உண்ணும் உணவுகளிலேயே பழங்கள் மிகவும் சுவையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கிறது. பழங்களைத் தவிர்த்து காய்கறிகள் மற்றும் கீரைகள் ஆரோக்கியம் நிறைந்தவை என்றாலும், அனைவரும் பழங்களையே அதிகளவில் விரும்பிச் சாப்பிடுவார்கள். அதிலும் குறிப்பாக எந்த நோயாக இருந்தாலும் அதனைத் தீர்க்க கூடிய ஆற்றல் பழங்களுக்கு உள்ளது. உடலுக்குத் தேவையான அனைத்து வைட்டமின்கள் மற்றும் பிற கனிமச்சத்துக்களை வளமான அளவில் பழங்களில் உள்ளது. இதன் காரணமாக உடல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் பழங்கள் பெரும் பங்காற்றி உதவி புரிகிறது.

ஆனாலும், சிலர் பழங்களை தவறான முறையில் சாப்பிடுகின்றனர். இதனால் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். இந்தத் தவறான வழிமுறைகளை உடனடியாக மாற்றிக் கொண்டால், பழங்களில் இருந்து கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை நம்மால் எளிதாக பெற முடியும். இப்போது நாம் செய்யும் தவறுகள் என்ன என்பதையும், அதனை மாற்றிக் கொள்வது பற்றியும் தெரிந்து கொள்வோம்.

பழங்களை சாப்பிடும் செய்யும் தவறுகள்

பழங்களை மற்ற உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. இதனால் உடலில் நச்சுக்கள் உருவாகும். ஏனென்றால் பழங்களை கடினமான உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் போது, அது விரைவாக செரிமானம் ஆகாது. மேலும், வயிற்றில் நீண்ட நேரம் இருப்பதால் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை கடினமாக்கி விடும்.

இரவில் பழங்கள் வேண்டாம்

பழங்களை இரவு தூங்குவதற்கு முன்பாக சாப்பிட வேண்டாம். பழங்களை தூங்குவதற்கு முன்பாக சாப்பிட்டால், அது தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தி விடும். மேலும், இப்படிச் செய்வதால் அசிடிட்டியை உண்டாக்கி விடும். 

தண்ணீர் குடிக்க கூடாது

பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது மிகப் பெரியத் தவறு. பழங்களை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதால், செரிமான மண்டலத்தின் pH அளவு அதிகரிக்கும். இது, சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தும். இதன் காரணமாக வயிற்றுப் போக்கு அல்லது காலரா போன்ற தீவிர பிரச்சனை ஏற்பட்டு, அவதிப்பட நேரிடுகிறது.

Chapati: உடல் எடையைக் குறைக்கும் சப்பாத்தி: தினமும் சாப்பிடலாமா?

ஆப்பிள் சாப்பிடும் போது

பலரும் ஆப்பிளை சாப்பிடும் நேரத்தில், அதனுடைய மேல் தோலை நீக்கி விட்டு சாப்பிடுகிறார்கள். இது முற்றிலும் தவறான செயல். ஆகவே, தோலுடன் சாப்பிடக் கூடிய பழங்களை தோலுடன் சாப்பிடுவது தான் நல்லது. அப்படி சாப்பிடும் போது உடல் பருமன் மற்றும் புற்றுநோய் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கலாம்.

ஆனால், தற்போது ஆப்பிளில் அதன் பளபளபத் தன்மை மாறாமல் இருப்பதற்காக, மேற்புறத்தில் மெழுகு பூசப்படுகிறது. ஆப்பிளை அப்படியே சாப்பிடும் போது, அந்த மெழுகு வயிற்றின் உள்ளே சென்று விடும். இதனால், பல நோய்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, ஆப்பிளை சாப்பிடும் போது, மேற்புறத் தோலை நீக்கி விட்டு சாப்பிடுவது தான் இப்போது சிறந்தது. ஒருவேளை மெழுகு பூசப்படவில்லை என்றால், அப்படியே தோலோடு சாப்பிடலாம்.

click me!