
1.. கார் அரிசி:
இது நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நல்ல உறுதி நிலையடையும். தசைகள் நல்ல முறையில் வளச்சியடையும். உடல் தோற்றத்தில் கவர்ச்சி ஏற்ப்படும். சருமம் மென்மையடையும்.
2.. குண்டு சம்பா அரிசி:
நா வறட்சியை தீர்க்கும். ஆனால் பசியை குறைக்கும்.
3. குன்று மணி சம்பா அரிசி-
வாதக் குறைபாடுகள் நீக்கும் சத்து உண்டு. விந்தை பெருக்கும். உடல் வன்மையைப் பெருக்கும்.
4. சீரகச் சம்பா:
சிறுவாத நோய்களைக் குணமாக்கும். பசியை அதிகரிக்கும்.
5. கோடைச் சம்பா அரிசி-
வாதப் பித்த சிலேட்டும் நோய்களைக் குணப்படுத்தும். உடலுக்கு நல்ல குளிச்சி இயல்பைத் தரும்.
6. ஈர்க்கு சம்பா-
சுவையானது. கண்களின் நலனுக்கு இது மிகவும் சிறந்தது. பித்த எரிச்சலை விலக்கும்.
7. புழுங்கலரிசி-
அரிசியின் முழுச்சத்தும் வீணாகாமல் தரும். எல்லா வயதினருக்கும் எல்லா தரத்தினருக்கும் உகந்தது. நோய்வாய்ப்பட்டவர்கள் சாப்பிட உகந்தது.
8. கோதுமை-
உடலுக்கு வளமையும் அளிக்கும். விந்தினை அதிகப்படுத்தும்.
9. சோளம்-
பசியை மந்தப்படுத்தும். உடல் வன்மையைப் பெருக்கும்.
10. கம்பு-
வீரிய விருத்தி அளிக்கும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். ஆனால் உடலில் நமைச்சல் ஏற்ப்படுத்தும்.
11. கேழ்வரகு-
உடல் உழைப்பாளிக்கு ஏற்ற தானியம். உடலுக்கு வேண்டிய புரதச்சத்துகளை பெருமளவில் தருகிறது.
12. சவ்வரிசி-
சத்து நிறைந்த இவ்வணவு நோய்வாய்ப்படிருப்பவர்களின் உடல் பலவீனத்தை அகற்றும்.
13. சாமை அரிசி-
காய்ச்சல் காரணமாக ஏற்படும் நா வற்ச்சியைப் போக்கும். உடலை வலிமை உடையதாக ஆக்கும் ஆற்றல் உள்ளது.
14. தினை அரிசி-
சளித்தொல்லையை அகற்றும். காய்ச்சல் வேகத்தைத் தணிக்கும். இரத்த சோகையை அகற்றும்.
15. திப்பிலி அரிசி-
விந்தினை வளக்கும். மேக நோயைக் குணமாக்கும். வாத கோளாறுகளை அகற்றும்.