உங்களுக்குத் தெரியுமா? ஆகாயத் தாமரையில் இலைகளில் தான் மருத்துவ பயன்கள் அதிகம்...

 
Published : Dec 28, 2017, 01:21 PM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
உங்களுக்குத் தெரியுமா? ஆகாயத் தாமரையில் இலைகளில் தான் மருத்துவ பயன்கள் அதிகம்...

சுருக்கம்

Do you know Major lotuses are medicinal benefits in leaves ...

ஆகாயத்தாமரை

** நீரில் மிதக்ககூடிய கூட்டம் கூட்டமாக வளரும் சிறுசெடிகள். 

** காம்பற்ற இலைகளையும் குஞ்சம் போன்ற வேர்களையும் உடையது. 

** அந்தரத் தாமரை என்றும் குறிப்பிடுவதுண்டு. தமிழகமெங்கும் குளம் குட்டைகளில் வளர்வது. இலைகளே மருத்துவப் பயனுடையது.

** வெப்பு தணித்து தாகங் குறைக்கும் மருந்தாகவும் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத் துவளச் செய்யும் மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

** இலையை அரைத்துக் கரப்பான், தொழுநோய்ப்புண் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்டி வர விரைவில் ஆறும். ஆசனவாயில் வைத்துக் கட்டி வர வெளிமூலம், ஆசனகுத்தல் ஆகியவை தீரும்.

** 25 மி.லி இலைச்சாற்றைச் சிறிது தேனுடன் காலை, மாலை 5 நாள்கள் கொடுக்க மார்பினுள் உண்டாகும் கிருமிக் கூடுகள் போகும். மேலும் நீர்ச்சுருக்கு, மூலம், சீதபேதி, இருமல் ஆகியவை தீரும்.

** இலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து அந்த ஆவியை 10 நிமிடம் ஆசனவாயில் பிடித்து வர மூல முளை அகலும்.

** இலைச்சாறு அரை லிட்டர், நல்லெண்ணெய் 1 லிட்டர் ஆகியவைற்றைக் கலந்து சிறு தீயில் காய்ச்சி வண்டல் மெழுகுப் பதமான நிலையில் கிச்சிலிக் கிழங்கு, சந்தனத் தூள், வெட்டி வேர், கஸ்துரி மஞ்சள், சாம்பிராணி வகைக்கு 10 கிராம் பொடித்துப் போட்டு இறக்கி வடித்து வாரம் 1 முறை தலைக்கிட்டுக் குளித்து வர உட்சூடு, கண்ணெரிச்சல், மூலநோய் ஆகியவை தீரும்.

PREV
click me!

Recommended Stories

Lip Balm : லிப் பாம் போடுறவங்க கண்டிப்பா 'இந்த' விஷயத்தை கவனிக்கனும்! அடுத்த முறை 'அந்த' தப்பை பண்ணாதீங்க
Weight Loss Breakfast Ideas : கடினமான உடற்பயிற்சி இல்லாமலே 'எடையை' குறைக்கும் காலை உணவுகள்!