காலையில் டீயுடன் பிஸ்கட் சாப்பிடுபவர்களுக்கு ஏற்படும் பிரச்னை..!!

Published : Feb 25, 2023, 12:48 PM IST
காலையில் டீயுடன் பிஸ்கட் சாப்பிடுபவர்களுக்கு ஏற்படும் பிரச்னை..!!

சுருக்கம்

பெரும்பாலான மக்கள் எழுந்தவுடன் ஒரு கப் சூடான டீ அல்லது காபியுடன் தான் தங்களுடைய நாளை துவங்குகின்றனர். அதனுடன் பிஸ்கட் சாப்பிட்டு பழகியவர்கள் ஏராளம். பலருக்கும் இவை இரண்டும் தான் காலை உணவாகவே உள்ளது.  

காலையில் எழுந்தவுடன் நாம் என்ன சாப்பிடுகிறோம், என்ன குடிக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். ஏனென்றால், நீண்ட மணிநேரம் எதுவும் சாப்பிடாமல் அல்லது குடிக்காமல் இருப்பது உடலுக்கு பல்வேறு வகையில் கேடு தரும். முந்தைய நாள் இரவு வரை சாப்பிட்டது செரிமானத்திற்குச் சென்றுவிடும் என்பதால், வயிறு காலியாக இருக்கும். 

பெரும்பாலான மக்கள் எழுந்தவுடன் ஒரு கப் சூடான டீ அல்லது காபியுடன் தங்கள் நாளைத் தொடங்குவார்கள். காபி அல்லது டீயுடன் பிஸ்கட் சாப்பிட்டு பழகியவர்கள் ஏராளம். பலர் காலையில் சிறிது ஆற்றலைப் பெற பிஸ்கட்டை தங்கள் உணவாக நம்பியிருக்கிறார்கள். ஏனெனில் காலை உணவு எப்படியும் தயார் செய்ய நேரம் எடுக்கும். அதுவரை பிஸ்கட் தான் அவர்களுக்கு ஆறுதல்.

இதை உண்பதன் மூலம் உற்சாகமாக உணரலாம். அது பற்றி எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த பழக்கம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதல்ல என்று சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதிகாலையில் பிஸ்கட் சாப்பிடுவது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்க வழிவகுக்கிறது. அதனுடன் தேயிலை சேர்க்கப்படும் போது, மீண்டும் குளுக்கோஸின் அளவு அதிகரித்துவிடுகிறது. இது தொடர்ந்து நடந்தால், சர்க்கரை நோய் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உண்மையில் பித்தம் ‘வில்லன்’ கிடையாது- அது ஒரு ’ஹீரோ’

காலையில் பிஸ்கட், டீ சாப்பிடும் போது சிலர் மூன்று அல்லது நான்கு பிஸ்கெட்கள் சாப்பிட்டு விடுவார்கள். இதனால் வயிறு நிரம்பியது போல தோன்றிவிடும். அதையடுத்து காலை நேரத்துக்கு வேண்டிய உணவை நம்மால் சாப்பிட முடியாது. அதன்காரணமாக இந்த பழக்கத்தை விரைவில் கைவிடுவது நல்லது, குறிப்பாக நீங்கள் அதிக எடையுடன் இருந்தால், உடனடியாக விட்டுவிடுங்கள்.

தொடர்ந்து டீ மற்றும் பிஸ்கட் சாப்பிடுவதால் அஜீரணம், வாயு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இன்றைய காலத்தில் பலர் வாயு மற்றும் அமிலத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை அறியாமல் தொடர்ந்து தேநீர் மற்றும் பிஸ்கட் சாப்பிட்டு வந்தால், மேலும் உடல்நலன் பாதிக்கப்படும். 

காலையில் எழுந்தவுடன் இரண்டு கிளாஸ் தண்ணீர் (சாதாரண வெப்பநிலை அல்லது மந்தமாக) குடிப்பது நல்லது. ஒருவேளை வெறும் தண்ணீர் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், சீரகம் அல்லது கொத்தமல்லி ஊறவைத்து குடிக்கலாம். காலையில் தண்ணீர் குடிப்பதும் மிகவும் நல்லது. இதனுடன் சிறிது இலவங்கப்பட்டை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
 

PREV
click me!

Recommended Stories

Kidney Stone Symptoms : உங்க கிட்னில கல்லு இருக்குனு காட்டுற '4' அறிகுறிகள் இவைதான்; இதை அலட்சியம் பண்ணாதீங்க!
Winter Hair Fall : வெந்தயத்தை இப்படியும் யூஸ் பண்ணலாமா? குளிர்கால முடி உதிர்வைத் தடுக்க சூப்பர் வழி