திருமணத்திற்கு முன்பே குழந்தை கட்டாயம்!.. ஒரு பெண் பல திருமணம் - பழங்குடியினரின் வினோத சடங்குகள் ஒரு பார்வை

Published : Feb 19, 2023, 07:55 PM IST
திருமணத்திற்கு முன்பே குழந்தை கட்டாயம்!.. ஒரு பெண் பல திருமணம் - பழங்குடியினரின் வினோத சடங்குகள் ஒரு பார்வை

சுருக்கம்

திருமணத்திற்கு முன்பே குழந்தை கட்டாயம் இருக்க வேண்டும் என்றும், ஒரு பெண் பல திருமணங்களை செய்து கொள்ளலாம் என்றும் பழங்குடியினர் இன்றளவும் பல்வேறு சடங்குகளை செய்து வருகிறார்கள்.

இந்திய கலாச்சாரத்தின் படி, ஆண் மற்றும் பெண் இடையேயான எந்தவொரு உடல் உறவும் திருமணத்திற்குப் பிறகுதான். இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு.

இங்கே எல்லா விஷயங்களிலும் வித்தியாசம் இருக்கிறது. சடங்குகள், உணவு, உடை, மொழி எல்லாமே வேறு. திருமண மரபிலும் இந்த வேறுபாட்டை அடையாளம் காணலாம். இந்தியாவில் பல்வேறு சாதிகள் மற்றும் பழங்குடியினர் இருப்பதால், அவர்களின் மரபுகளும் வேறுபட்டவை.

நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் பல விசித்திரமான திருமண முறைகள் உள்ளது. அவை இன்றும் சிலரால் பின்பற்றப்படுகின்றன. இந்தியாவில் உள்ள இந்த தனித்துவமான திருமண முறைகள் மற்றும் சடங்குகள் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம். இங்கு ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட முறை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறாள். அது எங்கு தெரியுமா ?

மேகாலயா - காசி பழங்குடியினர்

மேகாலயாவின் காசி பழங்குடியின மக்கள் தனித்துவமான திருமண நடைமுறையைக் கொண்டுள்ளனர். இங்குள்ள வழக்கப்படி பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை திருமணம் செய்து கொள்ளலாம். இங்கு பெண்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி, பெண் விரும்பினால், திருமணத்திற்குப் பிறகு தன் கணவனை மாமியார் வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.

சத்தீஸ்கர் - துர்வா பழங்குடியினர்

சத்தீஸ்கரின் துர்வா பழங்குடியினரில், சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்கிறார்கள். உறவினர்கள் மற்றும் சகோதரிகளை திருமணம் செய்யும் வழக்கம் இங்கு நிலவுகிறது. அதுமட்டுமின்றி திருமணத்தை நிராகரிப்பவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.

திருமணத்திற்கு முன்பே குழந்தைகள்

ராஜஸ்தான் மற்றும் குஜராத்தின் உதய்பூர், சிரோஹி மற்றும் பாலி மாவட்டங்களில் வசிக்கும் கார்சியா பழங்குடியினர் குஜராத்தி, மார்வாரி, மேவாரி மற்றும் பிலி மொழிகளைப் பேசுகிறார்கள். இங்கு ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன் ஒன்றாக வாழ்கின்றனர். அவர்கள் குழந்தைகளைப் பெற்றால் மட்டுமே திருமணம் செல்லுபடியாகும். திருமணத்திற்கு முன்பே குழந்தைகள் பிறக்க வேண்டும்.

மாமா மற்றும் மருமகளின் திருமணம்

தென்னிந்திய சமூகத்தில் மாமா - மகள் திருமணம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நடைமுறைக்கு முக்கிய காரணம் நிலம் - சொத்து என்று கூறப்படுகிறது. அக்கா தன் கணவன் வீட்டில் உரிமை கொண்டாடக் கூடாது என்பதற்காகவே அவளுடைய அண்ணன் தன் மகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகச் சொல்லப்படுகிறது. நாடு முழுவதும் இன்றும் நடைமுறையில் இருக்கும் இந்த வித்தியாசமான திருமண சம்பிரதாயங்கள் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது என்பது பொய்யல்ல.

ஒரே பெண்ணை திருமணம் செய்யும் சகோதரர்கள்

ஹிமாச்சலப் பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து சகோதரர்களும் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொள்கின்றனர். இந்த வழக்கம் மிகவும் பழமையானது மற்றும் இந்த வழக்கம் கோதுல் சடங்கு என்று அழைக்கப்படுகிறது. இது நேற்றைய நடைமுறையல்ல. இந்த வித்தியாசமான திருமண மரபுகளில் சில ஹிமாச்சல பிரதேசம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் நடைமுறையில் உள்ளன.

குறிப்பாக இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசத்தில் இந்த வித்தியாசமான திருமண முறை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த பாரம்பரியத்தின் படி, அனைத்து சகோதரர்களும் ஒரே பெண்ணை திருமணம் செய்கிறார்கள். பிரபலமான நம்பிக்கையின்படி, மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் தங்கள் மனைவி திரௌபதி மற்றும் தாய் குந்தியுடன் கின்னவுர் மாவட்டத்தில் உள்ள குகைகளில் வாழ்ந்தனர்.

அன்றிலிருந்து இங்கு இந்த வழக்கம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. சகோதரர்களில், மூத்தவர் திருமணத்தின் அனைத்து சடங்குகளையும் கவனித்துக்கொள்கிறார். அந்த ஒரு பெண் தற்போது இருக்கும் அனைத்து சகோதரர்களையும் திருமணம் செய்து கொள்கிறாள். இதுபோன்ற பழக்க வழக்கங்கள் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது என்பதே உண்மை.

இதையும் படிங்க..3,111 பேருக்கு வேலை!.. ரூ. 7,614 கோடி! தமிழ்நாடு அரசு - ஓலா ஒப்பந்தம்! பிரம்மாண்ட வாகன ஆலை | முழு விபரம்

PREV
click me!

Recommended Stories

Relationship Tips : கள்ளக்காதல் செய்யுற ஆண்களை எப்படி கண்டுபிடிக்கனும்? மனைவிகள் தெரிந்து கொள்ள வேண்டிய '5' பாடங்கள்
Relationship Tips : ஆண்களே! மனைவியோட டார்ச்சர் தாங்கலயா? இந்த 5 விஷயங்களை பண்ற ஆளா நீங்க? செக் பண்ணுங்க!!