கோழி குழம்பு சுவையில் காளான் குழம்பு... ஒரு முறை செய்ங்க.. அடிக்கடி செய்வீங்க..

By Kalai SelviFirst Published Jul 3, 2024, 3:28 PM IST
Highlights

Kalan Kulambu Recipe : இந்த பதிவில் அனைவரும் விரும்பி சாப்பிடும் காளான் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் வீட்டில் உள்ளவர்கள் காளான் விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அவர்களுக்கு காளானில் குழம்பு செய்து கொடுங்கள். அதிலும் அந்த குழம்பிற்கு நீங்கள் மாசாலா அரைத்து செய்யும் போது சுவை அட்டகாசமாக இருக்கும்.  முக்கியமாக, இந்த குழம்பு செய்வது ரொம்பவே சுலபமாக இருக்கும். இந்த குழம்பை நீங்கள் சூடான சாதம் சப்பாத்தி பூரி ஆகியவற்றுடன் சாப்பிட்டால், சுவை அற்புதமாக இருக்கும். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் காளான் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  சுவையான செட்டிநாடு வத்தல் குழம்பு... ரெசிபி இதோ!

காளான் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
காளான் - 200 கிராம்
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 
பட்டை - 2
கிராம்பு - 5
கல்பாசி - சின்னது
அன்னாசிப் பூ - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
கொத்தமல்லி - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  ஒருமுறை பருப்பு குழம்பு 'இந்த' ஸ்டைலில் செஞ்சு பாருங்க.. கண்டிப்பா பிடிக்கும்..  ரெசிபி இதோ..! 

செய்முறை:
காளான் குழம்பு செய்யாமல் முதலில், அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், எடுத்து வைத்த சீரகம், சோம்பும், மிளகு ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கவும். பிறகு அதில் ஒரு தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு அதை அடுப்பில் இருந்து கீழே இறக்கி ஆற வைக்கவும். பிறகு அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை கிராம்பு, கல்பாசி அண்ணாச்சி பூ ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பிறகு இதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வழங்கியதும் அதில் பொடியாக நறுக்கி வைத்த ஒரு தக்காளியையும் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அதன் பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சுவைக்கு ஏற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். பிறகு அதில் அறைத்து வைத்த மசாலாவை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். பின் குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, ஒரு முறை கிளறி விட்டு குக்கரை இரண்டு விசில் விட்டு கீழே இறக்கவும். குக்கரில் விசில் போனதும் அதில் பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை மேலே தூவும். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் காளான் குழம்பு ரெடி. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!