இன்னும் வேண்டும் என்று சொல்ல வைக்கும் இறால் பெப்பர் ப்ரை!

By Dinesh TGFirst Published Sep 17, 2022, 5:40 PM IST
Highlights

மட்டன் ,சிக்கன்  போன்று கடல் உணவுகளையும்  மக்கள் விரும்பி சாப்பிடுவர்.கடல் உணவு என்றவுடன் நாம் அனைவரும் மீனை மட்டும் தான் கூறுவோம். ஆனால் மீனோடு அல்லாமல்  பல  வகையான கடல் உணவுகள் உள்ளன. அப்படி ஒரு வகையான கடல் உணவு தான் இறால்

மட்டன் ,சிக்கன்  போன்று கடல் உணவுகளையும்  மக்கள் விரும்பி சாப்பிடுவர்.கடல் உணவு என்றவுடன் நாம் அனைவரும் மீனை மட்டும் தான் கூறுவோம். ஆனால் மீனோடு அல்லாமல்  பல  வகையான கடல் உணவுகள் உள்ளன. அப்படி ஒரு வகையான கடல் உணவு தான் இறால். ஒரு முறை இறாலை சுவைத்தவர்கள் அதனை நிச்சசயமாக  அடிக்கடி உண்ண விரும்புவார்கள். வெறும்சுவை மட்டும் தானா? என்றால், அது தான் இல்லை. இறால் நமது உடளுக்கு பல விதமான நன்மைகளை தருகிறது.  என்னன்னு தெரிஞ்சுக்கணுமா?

 இறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும்.

சரும சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்திற்கு எதிராக செயல்படும்.

ஹெபாரின் என்ற பொருள் உள்ளதால் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். குறிப்பாக  கணினி முன் வெகு  நேரம் பணி  செய்பவர்களுக்கு சிறந்தது.

இதில் உள்ள  கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்  மேலும் தசைகளை  வலுவடைய செய்யும்.  சரிங்க இவ்ளோ நன்மைகளை கொண்டுள்ள இறாலை வைத்து இன்னைக்கு நாம இறால் பெப்பர் பிரை பண்ணை பார்க்கலாம் வாங்க. 

இதற்கு தேவையான பொருட்களை முதலில் தெரிஞ்சுக்கலாம். 

தேவையான பொருட்கள்: 

இறால் – 250 கிராம் (சுத்தம் செய்தது )

வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 4 

இஞ்சி – 25 கிராம்

பூண்டு – 25 கிராம்

கறிவேப்பிலை – சிறிது

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

மிளகு தூள் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

அறுசுவையும் கலந்த ''தேங்காய்ப்பால் மீன் குழம்பு'' செய்வது எப்படி?

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கழுவி வைத்துள்ள இறாலைப் போட்டு மஞ்சள் தூள், மிளகு தூள் ,  மிளகாய் தூள்,  மற்றும்  உப்பு சேர்த்து கலக்கி வைத்து  ஊற வைக்க வேண்டும். அடுத்து இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயை கொரகொரவென  அரைத்து, அதனை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.  பின்  அடுப்பில்  கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும்  வதக்க வேண்டும்.  

கறி குழம்பு சுவையை மிஞ்சும் மீல் மேக்கர் கிரேவி !

இதனையடுத்து   அரைத்த இஞ்சி பூண்டு மிளகாய் மசாலாவை  சேர்த்து, நன்கு மணம் வரும் வரை வதக்கி விட வேண்டும். பின்னர்  ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, தேவை இருப்பின் சிறிதளவு  அளவு உப்பு தூவி,  பொன்னிறமாகும் வரை  இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை  நன்கு பிரட்டி விட வேண்டும்.   இறால் அளவுக்கு அதிகமாக வெந்துவிடக்கூடாது என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.  இப்போது இறால் பெப்பர் ப்ரை ரெடி!!!

click me!