நாவூறும் செட்டிநாடு காளான்... நொடியில் காலியாகிடும்...ரெசிபி இதோ!

By Kalai SelviFirst Published Jul 27, 2024, 2:28 PM IST
Highlights

Chettinad Kaalan Recipe : இந்த கட்டுரையில் செட்டிநாடு காளான் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

காளான் என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். காளானில் எக்கச்சக்கமான நன்மைகள் நிறைந்துள்ளது. எனவே, காளானில் அவ்வப்போது ஏதாவது ஒரு ரெசிபி செய்து சாப்பிடுங்கள். நீங்கள் எப்போதும் காலணியில் ஒரே மாதிரியான ரெசிபி செய்து சாப்பிடுகிறீர்களா? வித்தியாசமான சுவையில் காளான் செய்து சாப்பிட விரும்பினால், செட்டிநாடு காளான் செய்து சாப்பிடுங்கள். இந்த செட்டிநாடு காளான் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த செட்டிநாடு காளான் செய்து கொடுங்கள். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க... இப்போது இந்த கட்டுரையில் செட்டிநாடு காளான் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  காளான் வாங்குனா இப்படி ஒருமுறை  வறுவல் செஞ்சி சாப்பிடுங்க.. டேஸ்ட்டா இருக்கும்!

Latest Videos

செட்டிநாடு காளான் செய்ய தேவையான பொருட்கள்:

காளான் - 1 பாக்கெட் (நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
மல்லி - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
வர மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  காளானில் இப்படி ஒரு முறை ப்ரை செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட்டா இருக்கும்.. ரெசிபி இதோ!

செய்முறை:

செட்டிநாடு காளான் செய்ய முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில், வரமிளகாய், உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் சீரகம், மல்லி, மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்தெடுத்து, பிறகு அதை ஒரு தட்டில் வைத்து ஆற வைத்து, பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தையும் போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பிறகு அதில் கறிவேப்பிலை, காளான் சேர்த்து நன்கு வதக்கவும் காளான் நன்கு வேக வைக்கவும். பின் அதில் தக்காளி, தேவையான அளவு உப்பு, 1/2 ஸ்பூன் அரைத்த மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு ஒரு தட்டை கொண்டு மூடி வைக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து மூடியை திறந்து ஒரு முறை கிளறி விடுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுகையில் செட்டிநாடு காளான் தயார். இந்த செட்டிநாடு காளானை ரசம் சாதம், சாம்பார் சாதத்துடன் சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். 
 
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!