அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த வார இறுதியில், "பிணைக்கைதிகளை விடுவிப்பது, காசா போரை முடிவுக்குக் கொண்டு வருவது மற்றும் மிக முக்கியமாக, மத்திய கிழக்கில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அமைதியைக் கொண்டு வருவது குறித்து, ஹமாஸ் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளுடன் மிக நேர்மறையான விவாதங்கள் நடந்துள்ளன" என்று தெரிவித்துள்ளார்.
"இந்தப் பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமாகவும், விரைவாகவும் முன்னேறி வருகின்றன. இறுதி விவரங்களைப் பேசவும் தெளிவுபடுத்தவும் தொழில்நுட்பக் குழுக்கள் மீண்டும் திங்கட்கிழமை எகிப்தில் சந்திக்க உள்ளன. முதல் கட்டம் இந்த வாரத்திற்குள் நிறைவடையும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைவரும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்," என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.