சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலான 'குடியரசு பலுசிஸ்தான்' (Republic of Balochistan) என்ற பெயரிலான ஒரு அறிக்கை, பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிக்கையின்படி, பலுசிஸ்தான் தனது சொந்த தேசியக் கொடி, தேசிய கீதம் மற்றும் 'பலூச்சி ஃபலூஸ்' (Baluchi Falus) என்ற புதிய நாணயத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
முக்கியமாக, பலுசிஸ்தான் இராணுவம், கடற்படை மற்றும் வான்படை என சுமார் 5,00,000 பேர் கொண்ட பாதுகாப்புப் படையின் உதவியுடன், மாகாணத்தின் 85 சதவீத நிலப்பரப்பைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தங்கம், செம்புச் சுரங்கங்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட எரிவாயு வயல்கள், 1,200-க்கும் அதிகமான நிலக்கரிச் சுரங்கங்கள் தற்போது பலுசிஸ்தானின் சொந்த நிர்வாகத்தின் கீழ் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.