இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் அரசு வேலைகளில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரித்து அந்நாட்டு மாணவர்கள், கடந்த சில மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வங்கதேச சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளின் குடும்பங்களுக்கு அரசு வேலைகளில் 30% சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் நடைமுறை உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரித்து அந்நாட்டு மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.