Karthigai Deepam: பரமேஸ்வரி பாட்டிக்கு அதிர்ச்சி கொடுத்த சாமுண்டீஸ்வரி - என்ன ஆச்சு? கார்த்திகை தீபம் அப்டேட்!

Published : Mar 21, 2025, 01:30 PM IST

ரேவதி திருமணம், அடுத்த முகூர்த்தத்திலாவது நடக்குமா? கார்த்திக் எப்படி திருமணத்திற்கு சம்மதம் சொல்ல போகிறான் என்கிற பரபரப்பான கதைக்களத்தில் நகர்ந்து வரும் 'கார்த்திகை தீபம்' சீரியலின் இன்றைய அப்டேட் குறித்து பார்கலாம்.  

PREV
15
Karthigai Deepam: பரமேஸ்வரி பாட்டிக்கு அதிர்ச்சி கொடுத்த சாமுண்டீஸ்வரி - என்ன ஆச்சு? கார்த்திகை தீபம் அப்டேட்!

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராஜேஸ்வரி, சாமுண்டீஸ்வரியை பார்த்து உன் மகள் திருமணத்தை வெச்சுகிட்டு எங்க போனே... உனக்கு என்ன என்னாச்சு என்று கேட்க, தன்னை சிலர் கடத்தி சென்ற விஷயத்தை செல்லி அதிர்ச்சி கொடுக்கிறாள். இந்த நிலையில் இன்று என்ன நடக்க போகிறது என்பதை பற்றி பார்ப்போம்.

25
ரேவதி வாழ்க்கையை நினைத்து கவலைப்படும் ராஜேஸ்வரி

ராஜேஸ்வரி, ரேவதி வாழ்க்கையை நினைத்து கவலையோடு அந்த கேடு கெட்டவனையா உன் பொண்ணுக்கு கட்டி வைக்க போற, என்று சாமுண்டீஸ்வரியிடம் கேட்க, இல்ல ட்ரைவர் ராஜா தான் என் பொண்ணுக்கு மாப்பிள்ளை என்று முடிவு செய்துவிட்டேன். அவன் தான் அவள் கழுத்தில் தாலி கட்ட போகிறான் என்பதையும் கூறுகிறாள். 

Karthigai Deepam: சுக்குநூறாக உடைந்த கார்த்திக்கின் திட்டம்; கோபத்தில் ரேவதி! கார்த்திகை தீபம் அப்டேட்!

35
பரமேஸ்வரி பாட்டிக்கு அதிர்ச்சி கொடுத்த சாமுண்டீஸ்வரி

மற்றொருபுறம், பரமேஸ்வரி பாட்டி நான் சென்று சாமுண்டீஸ்வரியிடம் பேசுறேன். என் பேரனுக்கு ரேவதியை திருமணம் செய்து வைக்க அவள் சம்மதிப்பாள் என கூறிவிட்டு, நம்பிக்கையோடு சென்று, என் பேத்தி ரேவதிக்கு என் பேரனை கட்டி வைக்க சம்மதம் சொல்லு என்று கூற சாமுண்டீஸ்வரி கண்டு கொள்ளாமல் இருக்கிறாள்.  பின்னர் கோவத்தோடு, இங்கபாருங்க நீங்க நினைக்கிறது ஒரு காலமும் நடக்காது என்று அதிர்ச்சி கொடுக்க, அங்கிருந்து பரமேஸ்வரி பாட்டி கவலையோடு திரும்புகிறாள். 

45
மகளுக்காக கேள்வி கேட்கும் ராஜராஜன்:

அதனை தொடர்ந்து ராஜராஜன், இங்க பாரு சாமுண்டீஸ்வரி, அந்த மகேஷ் நல்லவன் இல்ல. அவனையா நம்ப பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வெச்சு, அவள் வாழ்க்கையை கெடுக்க போற என கூற... இதற்கு சாமுண்டீஸ்வரி அவன் நல்லவன் இல்லை என்பது எனக்கு தெரியும். அப்பறம் எப்படி என் பொண்ண அவனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன். 

Karthigai Deepam: கல்யாணத்தை நிறுத்திய ரேவதி! சாமுண்டீஸ்வரியின் அதிரடி என்ட்ரி - கார்த்திகை தீபம் அப்டேட்!

55
கார்த்திக் மாப்பிள்ளையாக போவது எப்படி?

ரேவதிக்கு கல்யாணம் நடக்கும் ஆனால் மாப்பிள்ளை அவன் கிடையாது. ட்ரைவர் ராஜாவை தான் நம்ப வீட்டு மாப்பிள்ளையாக்க போறேன் என்று சொல்ல, ராஜராஜன் நாம நினைத்த மாதிரியே எல்லாம் நடக்குது என சந்தோஷப்படுகிறான். இந்த விஷயம் தெரியாமல் கவலையில் இருக்கும் பரமேஸ்வரி பாட்டியை பார்த்து ராஜ ராஜன் சொல்வாரா? இந்த திருமணத்திற்கு எப்படி கார்த்திக் சம்மதம் சொல்ல போகிறான் என்பதை பற்றி பார்ப்போம். 

Read more Photos on
click me!

Recommended Stories