ஜீவானந்தம் யார் தெரியுமா? உடைந்தது சஸ்பென்ஸ்... இதை தாங்குவாரா குணசேகரன்! 'எதிர்நீச்சல்' அப்டேட்!

Published : Aug 05, 2023, 03:59 PM IST

எதிர்நீச்சல் சீரியலின் ப்ரோமோ வெளியாகி, இன்றைய எபிசோட் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.  

PREV
15
ஜீவானந்தம் யார் தெரியுமா? உடைந்தது சஸ்பென்ஸ்... இதை தாங்குவாரா குணசேகரன்! 'எதிர்நீச்சல்' அப்டேட்!

 சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில், பட்டம்மாளின் 40 சதவீத சொத்தை, ஆட்டையை போட்ட ஜீவானந்தம் யார்? என்று தெரிந்து கொள்வதில் குணசேகரன் மற்றும் ஜனனி இருவரும் தீவிரமாக விசாரணை செய்து வரும் நிலையில் தற்போது... ஜீவானந்தம் யார் என்கிற உண்மை ஈஸ்வரி மூலமாக தெரியவந்துள்ளது.

25

ஈஸ்வரி, கல்லூரியில் படிக்கும்போது ஒருவரை காதலிப்பார். இந்த காதல் கதையை சமீபத்தில் அவர் ஜனனி, ரேணுகா, மற்றும் நந்தினியிடம் பகிர்ந்து கொண்டார். ஈஸ்வரிக்கு அந்த நபர் மீது காதல் இருந்தாலும், ஈஸ்வரியின் தந்தை மகளை பெரிய இடத்தில் திருமணம் செய்து வைக்கவேண்டும் என கட்டாயப்படுத்தி, குணசேகரனுக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார். ஈஸ்வரியின் காதலன் ஒரு சமூக போராளி என்றே காட்டப்பட்டது. 

கயல் சீரியலில் எழில் திருமணம் யாருடன் நடந்தது தெரியுமா? செம்ம ட்விஸ்ட்... வைரலாகும் புகைப்படம்..!

35
ethirneechal

ஏற்கனவே ரசிகர்கள் பலரும் ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலராக இருக்கலாம் என கூறிவந்த நிலையில், இதனை உறுதி படுத்துவது போல் தற்போது புதிய புரோமோ வெளியாகியுள்ளது. ஈஸ்வரி... ஜீவனந்தத்திற்கு போன் செய்து, நான் குணசேகரன் மனைவி ஈஸ்வரி பேசுகிறேன் என கூற, அதற்க்கு ஜீவானந்தம், நீங்க குணசேகரன் மனைவி என்பதால் நான் பேசவில்லை, ஈஸ்வரி என்பதால் பேசுகிறேன் என கூறுகிறார். ஈஸ்வரியும் ஏதோ யோசனையோடு போனை பார்ப்பதால், தன்னுடைய பழைய காதலன் தான் ஜீவானந்தம் என்பதை கண்டுபிடித்து விட்டார் என்றே நினைக்க தோன்றுகிறது. 
 

45

மற்றொரு புறம், அருண் தன்னை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டதால்... வீட்டிற்கு வந்து கரிகாலனை பிடிக்கவில்லை என கத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறார் ஆதிரை. இதற்க்கு மிகவும் எமோஷ்னலாக எல்லோரும் என்ன கிறுக்குப்பய என சொல்றாங்க, அந்த கிறுக்கு பயலுக்கும் ஒரு மனசு இருக்கு என கரிகாலன் கண்கலங்குவது மனதை தொடும் விதத்தில் உள்ளது. எனவே ஆதிரை மனம் திருந்தி கரிகாலனுடன் வாழ துவங்குவாரா? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. 

அவனுக்கெல்லாம் ஏன் வாய்ப்பு கொடுக்குற..! சிம்புவுக்கு செம்ம டோஸ் விட்ட கவுண்டமணி.. சைலண்டாக STR செய்த சம்பவம்!

55

மற்றொரு புறம், அருண் தன்னை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டதால்... வீட்டிற்கு வந்து கரிகாலனை பிடிக்கவில்லை என கத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறார் ஆதிரை. இதற்க்கு மிகவும் எமோஷ்னலாக எல்லோரும் என்ன கிறுக்குப்பய என சொல்றாங்க, அந்த கிறுக்கு பயலுக்கும் ஒரு மனசு இருக்கு என கரிகாலன் கண்கலங்குவது மனதை தொடும் விதத்தில் உள்ளது. எனவே ஆதிரை மனம் திருந்தி கரிகாலனுடன் வாழ துவங்குவாரா? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories