சிறகடிக்க ஆசை சீரியலில் சத்யாவுக்கும் ரேகாவுக்கும் பாட்டி வீட்டில் வைத்து திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ள முத்து, அதற்கான வேலைகளை முழுவீச்சில் செய்து வருகிறார். முத்து ஃபேமிலியில் உள்ள அனைவரும் பாட்டி வீட்டில் ஆஜராகி உள்ளனர். மறுபுறம் சிந்தாமணி, தன் மகளின் திருமணம் எங்கு நடக்கிறது என்பது தெரியாமல் திக்குமுக்காடிப்போய் இருக்கிறார். கல்யாண பதற்றத்தில் இருக்கும் ரேகாவை கூல்டவுன் பண்ணும் விதமாக அவருக்கு மேக்கப் போட்டு விடுகிறார் ஸ்ருதி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
மறுபுறம் மீனா, தன் கையில் செயின் உடன் வந்து ரேகாவுக்கு போட்டு விடுகிறார். அவசர அவசரமாக கல்யாணம் நடப்பதால், தங்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் இந்த செயின் மட்டும் போட்டுவிடுகிறேன் என கூறுகிறார். கல்யாண வேலைகள் பரபரவென நடந்துகொண்டிருக்க, தன்னுடைய தோழி பார்வதி உடன் வெளியே சென்று பேசுகிறார் விஜயா. அப்போது சிந்தாமணிக்கு அப்படி என்ன கோபம், தன்னோட பொண்ணு கல்யாணத்தை பார்க்க அவளுக்கு கொடுத்து வைக்கல என சொல்கிறார் பார்வதி.
35
விஜயாவின் ரிவெஞ்ச்
உடனே விஜயா, சிந்தாமணி இந்த கல்யாணத்தை பார்க்க போவதில்லைனு யார் சொன்னா என கேட்கிறார். நீ என்ன சொல்ற என பார்வதி கேட்க, அதற்கு விஜயா, அந்த சிந்தாமணி இந்த கல்யாணத்தை பார்க்க தான் போறா என கூறுகிறார். அவன் என் கூடவே இருந்து எனக்கு துரோகம் பண்ணுனால்ல, அதனால் அவளுக்கு நான் ஒரு பதிலடி கொடுக்கப் போறேன் என சொல்கிறார். என்ன பண்ண போற என பார்வதி கேட்கிறார். பொண்ணுக்கு அவ கூடவே இருந்து அவ கல்யாணத்தை பார்க்க ஆசை இருக்கும்ல, இங்க தாலி கட்டும்போது அந்த சிந்தாமணி இங்க வருவா, அதற்கான ஏற்பாடுகளை செய்யப்போறேன் என கூறுகிறார் விஜயா.
அய்யோ விஜயா கல்யாணம் நடக்குற இடத்துல எதுவும் வில்லங்கத்தை பண்ணிவிட்றாத என பார்வதி சொன்னதும், இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும் அதுல எந்த பிரச்சனையும் வராது என கூறும் விஜயா, உள்ளே சென்று ரூமில் சத்யா - ரேகா ஆகியோர் மணக்கோலத்தில் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கும் வீடியோவை சிந்தாமணிக்கு அனுப்பிவிடுகிறார். அதைப்பார்த்து ஷாக் ஆன சிந்தாமணி, விஜயாவிடம் போனில் பேசுகிறார். அவரிடம் இந்த கல்யாணம் எங்க நடக்கிறது என்கிற விவரத்தை சொல்லி, முடிஞ்சா தடுத்து பார் என சவால் விடுகிறார் விஜயா.
55
காத்திருக்கும் ட்விஸ்ட்
இதையடுத்து தன்னுடைய கணவருடன், காரில் கிளம்பி வருகிறார் சிந்தாமணி. அவர் வரும் வழியில் தன்னுடைய மகள் ரேகாவுக்கு போன் போடுகிறார். ஆனால் போனை எடுக்கலாமா வேண்டாமா என ரேகா யோசிக்க, அப்போது அங்கு வரும் விஜயா, அந்த போனை பிடுங்கி, இப்போ எடுத்து பேசுனா பிரச்சனை தான் வரும். அதனால் போனை எடுக்காத என கூறுகிறார். பின்னர் அந்த போனை வாங்கும் ஸ்ருதி, அதனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிவிடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன்பின் என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.