மாமானு ஓடிவந்த மயில்... நோஸ்கட் பண்ணி அனுப்பிய பாண்டியன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ட்விஸ்ட்

Published : Jan 18, 2026, 03:49 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மயில் கொண்டு வந்த பொருட்களை திருப்பி அவர் வீட்டுக்கே அனுப்பி இருக்கிறார் பாண்டியன். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Super Twist in Pandian Stores 2 Serial

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தங்கமயில் போலி நகை போட்டு ஏமாற்றியது தெரியவந்ததை அடுத்து பல்வேறு எதிர்பாராத ட்விஸ்ட் அரங்கேறி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தங்கமயில் கொண்டுவந்த எந்த பொருளும் இனி நம் வீட்டில் இருக்கக் கூடாது என முடிவு செய்யும் பாண்டியன், அனைத்தையும் பேக் செய்யச் சொல்கிறார். இதையடுத்து மீனாவும், ராஜியும், தங்கமயில் சீதனமாக கொண்டு வந்த பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து மூட்டை கட்டுகிறார்கள். தங்கமயில் கொண்டு வந்த பொருட்களை எடுத்து வைக்கும் போது ராஜியும், மீனாவும் ஃபீல் பண்ணி பேசுகிறார்கள்.

24
கோமதியின் தடாலடி முடிவு

மயில் எவ்வளவு ஆசை ஆசையா இந்த பொருட்களை எல்லாம் இந்த வீட்டுக்கு எடுத்துட்டு வந்திருப்பாங்க என ராஜி சொல்ல, அவங்க மட்டும் இவ்ளோ பெரிய பொய்யை சொல்லாம இருந்திருந்தால் இங்கேயே நிம்மதியா வாழ்ந்திருக்கலாம் என மீனா கூறுகிறார். ஏற்கனவே டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பியதுக்கே மயில் குடும்பத்தாங்க, இப்போ அவங்க பொருளையெல்லாம் அனுப்புறோம் என்ன செய்ய போறாங்களோ என ராஜி சொல்ல, இதையெல்லாம் அந்தப் பக்கம் நின்று கேட்டுக்கொண்டிருந்த கோமதி, அவ ஏதாவது செஞ்சா, அவ குடும்பத்தை வெட்டிப் போட்டுட்டு ஜெயிலுக்கு போயிருவேன் என சொன்னதைக் கேட்டு மீனா மற்றும் ராஜி அதிர்ச்சி அடைகிறார்கள்.

34
மயில் வீட்டிற்கு செல்லும் பொருட்கள்

மயிலுனு ஒருத்தி இந்த வீட்ல இருந்ததுக்கான அடையாளமா அவளுடைய எந்த பொருளும் இந்த வீட்டில் இருக்கக் கூடாது என கோமதி சொன்னதை அடுத்து, எல்லா பொருளையும் பேக் பண்ணி ஒரு ஆட்டோவில் ஏற்றி மயிலின் அம்மா வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்கள். அங்கு சாமான் வந்து இறங்குவதை பார்த்த மயிலின் தந்தை, உள்ளே வந்து தன் மனைவி பாக்கியத்திடம் வெளியே வண்டியில் ஜாமான் வந்து இறங்கிருக்கு என சொல்ல, மயில், பாக்கியமும் பதறிப்போய் வெளியே சென்று பார்க்கிறார்கள். பின்னர் அந்த பொருட்களை கொண்டு வந்த ஆட்டோ டிரைவர், பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் இருந்து தான் இதையெல்லாம் கொடுத்துவிட்டார்கள் என சொல்ல அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.

44
சண்டைபோடும் சரவணன்

இதையடுத்து மயில், கோமதிக்கு போன் போடுகிறார். இவ எதுக்கு எனக்கு போன் போடுறா, நான் எதுக்கு எடுக்கணும் என சொல்லி கட் பண்ணிவிடுகிறார் கோமதி. பின்னர் ராஜி, மீனா என ஒவ்வொருவருக்கும் போன் போடுகிறார் தங்கமயில், இதைக்கேள்விப்பட்ட கோமதி, எல்லாரும் அவ நம்பரை பிளாக் பண்ணுங்க என சொல்ல, அனைவரும் பிளாக் பண்ணிவிடுகிறார்கள். பின்னர் கடைக்கு சென்று சரவணனை பார்க்க செல்கிறார் தங்கமயில். அவளைப் பார்த்ததும் கோபப்படும் சரவணன், மரியாதையா நீ இங்க இருந்து போகலேனா நான் உன்னை என்ன பண்ணுவேன்னு தெரியாது என கோபத்தில் கத்துகிறார்.

அப்போது அங்கு வரும் பாண்டியன், இதோ பாருமா என்ன பண்றதா இருந்தாலும் அதை கோர்ட் மூலமா பண்ணு என சொல்லிவிட, கண்ணீர் சிந்தியபடி நிற்கிறார் மயில். இதையடுத்து அவரை இங்கிருந்து கிளம்பு என கூறுகிறார் பாண்டியன். இதையடுத்து என்ன ஆனது? மயில் எடுக்கப்போகும் முடிவு என்ன? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories