தீபாவை கொள்ள நடந்த சதி! ஐஸ்வர்யாவை காட்டி கொடுத்த பாம்பு! அதிரடி திருப்பங்களுடன் - கார்த்திகை தீபம் அப்டேட்!

Published : Nov 17, 2023, 03:51 PM IST

 ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம், இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கோவிலில் ஐஸ்வர்யா பாம்பாட்டியை வைத்து கார்த்தியை பாம்பு கொத்த ஏற்பாடு செய்தாள். இதனை தொடர்ந்து இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.   

PREV
15
தீபாவை கொள்ள நடந்த சதி! ஐஸ்வர்யாவை காட்டி கொடுத்த பாம்பு! அதிரடி திருப்பங்களுடன் - கார்த்திகை தீபம் அப்டேட்!

அதாவது, தீபாவை அரிவாளால் வெட்ட வந்த பூசாரி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வீழ்ந்து கிடந்து தண்ணீர் தண்ணீர் என கலைத்தபடி கேட்டு கொண்டிருக்க அங்கு ஒரு சிறுமி தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கிறாள். வீடே இல்லாத இடத்தில் நீ எப்படி தண்ணீர் கொண்டு வந்த என்று பூசாரி கேட்க அந்த பெண் அம்மன் என தெரிய வருகிறது. 

25

தீபாவை கொல்ல செய்த சதி வேலைகளை நீயே போய் ஒப்பு கொள் என்று மிரட்ட பூசாரி நான் செய்தது தப்பு தான் என மன்னிப்பு கேட்டு அங்கிருந்து கோவிலுக்கு கிளம்பி செல்கிறார். இங்கே கோவிலில் பூஜை நடந்து கொண்டிருக்க பாம்பாட்டி பாம்பை திறந்து விடுகிறான். 

தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு ரஜினி - கமலுக்கு அழைப்பு!

35

அந்த பாம்பும் ஆட்கள் இருக்கும் இடத்திற்கு ஊர்ந்து வர எல்லாரும் பாம்பு வந்து விட்டது, யாரை காட்டி கொடுக்க போகிறது என எதிர்பார்த்து காத்திருக்க இந்த பாம்பு முதலில் கார்த்தியையே பார்த்து விட்டு திடீரென திரும்பி ஐஸ்வர்யாவை கொத்துகிறது. இதனையடுத்து பூசாரி பூஜை நல்லபடியா முடிந்தது, அந்த அம்மனும் தப்பு பண்ணவங்கள கண்டு பிடிச்சி கொடுத்துருச்சு. இனிமே இது உங்கள் குடும்ப பிரச்சனை, நீங்களே பேசி தீர்த்துக்கோங்க என்று சொல்லி கிளம்பி செல்ல ஊர் மக்களும் கலைந்து செல்கின்றனர். 

45

அதன் பிறகு அங்கு வரும் பூசாரி அன்னைக்கு கோவில் திருவிழாவில் தீபாவை கொல்ல ஏற்பாடு செய்தது ஐஸ்வர்யா தான், பணத்தாசை காட்டி என்னையும் மாற்றிட்டாங்க என செய்த தவறுகளை உடைக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அருண் ஐஸ்வர்யாவை பிடித்து திட்ட மைதிலி அபிராமியை கேள்வி கேள்வி கேட்டு ஏற்றி விடுகிறாள். 
நடிகர் விஜய் முதலில் திருமணம் செய்துகொள்ள இருந்தது இந்த பிரபலத்தின் மகளையா? சங்கீதாவால் ஏற்பட்ட மாற்றம்!

55

இதனால் உச்சகட்ட கோபமடையும் அபிராமி வீட்டிற்கு வந்ததும் ஐஸ்வர்யாவை பளாரென அறைகிறாள். இப்படியான நிலையில் அடுத்தாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Read more Photos on
click me!

Recommended Stories