சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் நிலைக்கு மீனா தான் காரணம் என கூறி அவரை திட்டி உள்ளார் விஜயா.
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜை பிளாக்மெயில் செய்து தன்னுடன் சேர்ந்து வாழ வைக்க பிளான் போட்டிருந்தார் ரோகிணி, இதற்காக மனோஜை ஒரு ஹோட்டலுக்கு வர வைத்து, அங்கு தான் கொடுக்கும் பேப்பரில் கையெழுத்து போடாவிட்டால் தான் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டி இருந்தார். இதற்கு பயந்து மனோஜும் அந்த பேப்பரில் கையெழுத்து போடச் சென்ற நேரத்தில் முத்துவும், மீனாவும் கிரிஷ் உடன் வந்து மனோஜை காப்பாற்றிவிட்டனர். இதனால் ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பினார் மனோஜ். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
25
வன்மத்தை கொட்டிய விஜயா
மனோஜை மீட்டு முத்துவும் மீனாவும் வீட்டுக்கு வந்த நிலையில், மீனாவால் தான் மனோஜுக்கு இப்படியெல்லாம் நடக்குது என்றும் இவளை வீட்டை விட்டு துரத்தினால் தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும் என்றும் முட்டாள்தனமாக பேசுகிறார் விஜயா. இதைக்கேட்டு கடுப்பான முத்து, மீனா மட்டும் இல்லேனா இந்த முட்டாப்பய மனோஜ், ரோகிணி நீட்டிய பேப்பரில் கையெழுத்து போட்டிருப்பா, உங்க பையன காப்பாத்துனதே மீனா தான் அதை மறந்துராதீங்க என சொல்ல, விஜயா கோபித்துக் கொண்டு ரூமுக்குள் சென்றுவிடுகிறார். விஜயா தன்மீது தொடர்ந்து பழிபோடுவதால் மீனா கண்கலங்குகிறார்.
35
ஆத்திரத்தில் ரோகிணி
மறுபுறம் ரோகிணி வீட்டுக்கு சென்று தன்னுடைய அம்மாவிடம் நீ ஏன் கிரிஷை கூப்பிட ஸ்கூலுக்கு போகல என திட்டுகிறார். நான் போவதற்குள் முத்துவும் மீனாவும் கூட்டிட்டு போயிட்டாங்க என சொல்ல, அவங்களால என்னோட பிளான் எல்லாம் சொதப்பிவிட்டது என புலம்புகிறார் ரோகிணி. அப்போது அங்கு வரும் சிந்தாமணியிடம் தன்னுடைய பிளான் சொதப்பிய விஷயத்தை கூறுகிறார் ரோகிணி. அதற்கு சிந்தாமணியும், இந்த மீனாவை முதலில் அந்த வீட்டை விட்டு துரத்தணும், அவ இருக்குறதுனால தான் என்னோட பிசினஸும் பாதிக்குது, அவளுக்கு ஒரு முடிவு கட்டணும் என கூறுகிறார்.
இதன்பின்னர் ஸ்ருதியின் ரெஸ்டாரண்டிற்கு மீனா செல்கிறார். அங்கு வீட்டில் அத்தை தன்னை துரத்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள் என்று சொல்லி ஃபீல் பண்ணுகிறார். அப்போது ரவியும் அங்கு இருக்கிறார். அந்த சமயத்தில் நீத்து வருகிறார். அவரை வெளிய போ என ஸ்ருதி விரட்டுகிறார். அவரிடம் தான், ரவியிடம் அவர் என்னுடைய ரெஸ்டாரண்டில் வேலை பார்த்ததற்கான பணத்தை கொடுக்க வந்ததாக சொல்ல, சரி கொடுத்துட்டு கிளம்பு என கூறுகிறார் ஸ்ருதி. பின்னர், ரவியை தனியாக அழைத்து சென்ற நீத்து அவரிடம் பணத்தை கொடுத்துவிட்டு, ஒரு முத்தத்தையும் தந்துவிட்டு செல்கிறார். இதனால் ரவி கடுப்பாகிறார். பின்னர் ஸ்ருதியும் அவ என்ன கொடுத்தா என துருவி துருவி கேட்டுவிட்டு இறுதியில் முத்தம் கொடுக்கிறார். இப்படி இருவரும் மாற்றி மாற்றி தன்னை டார்ச்சர் பண்ணுவதால் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி நிற்கிறார் ரவி.
55
மீனாவை கடிந்துகொண்ட விஜயா
மறுபுறம் அண்ணாமலை தன்னுடைய நண்பன் பரசு உடன் வாக்கிங் செல்கையில் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை கூறுகிறார். அந்த சமயத்தில் ஒரு மர்ம நபர் புல்லட்டில் வேகமாக வந்து அண்ணாமலையை இடித்துவிட்டு செல்கிறார். இதில் கை உடைந்து அண்ணாமலை வலியால் துடிக்கிறார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க, அவரைப் பார்க்க பதறியடித்து ஓடி வரும் விஜயா, அங்கு வரும் மீனாவிடம், இந்த தரித்திரம் பிடித்தவலால் தான் அவருக்கு இப்படி ஆச்சு, இவளை துரத்துனா எல்லாம் சரியாகிவிடும் என திட்டுகிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.