Siragadikka Aasai Serial 25 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ், ரோகிணியை சந்தித்து அவருக்கு பணத்தை கொடுத்திருக்கிறார். இதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
விஜய் டிவியின் 'சிறகடிக்க ஆசை' சீரியல் இன்றும் பல எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி உள்ளது. குறிப்பாக முத்து, மீனா, ரோகிணி, மனோஜ் ஆகியோரின் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் உருவாகும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ரேகா சுகமாக இருக்க வேண்டும் என்பதற்காக முத்துவும் மீனாவும் இணைந்து அவரது அறைக்கு ஏசி வாங்கி, அதை பொருத்தும் ஏற்பாடுகளையும் செய்கிறார்கள். இதைப் பார்த்த ரேகா, "எனக்காக இவ்வளவு செலவு செய்ய வேண்டாம்; இங்கே இருக்கும் வசதியே போதும்" என்று கூறுகிறார்.
ஆனால், "இது எங்களுடைய பொறுப்பு" என்று கூறும் முத்து, எந்த தயக்கமும் இல்லாமல் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடிக்கிறார். மற்றொரு பக்கம், மனோஜ் நேரடியாக ரோகிணியை சந்தித்து, விவாகரத்துக்கு சம்மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறார். ஆனால் ரோகிணி அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். "ஒரு குழந்தை ஏற்கனவே தந்தையின் அரவணைப்பு இல்லாமல் வளர்ந்து வருகிறது. இன்னொரு குழந்தைக்கும் அதே நிலை வர நான் அனுமதிக்க மாட்டேன்" என்று உறுதியாக கூறுகிறார். இதனால் மனோஜ் அதிர்ந்து போகிறார்.
35
ரோகிணிக்கு பணம் கொடுத்த மனோஜ்
மேலும், கர்ப்பம் தொடர்பாக அனைவரும் தன்னை குற்றம் சாட்டியபோதும், அந்த குழந்தை உன்னுடையது என்பதை தெரிந்திருந்தும் நீ மௌனமாக இருந்தது ஏன் என்று கேள்வி எழுப்புகிறார். ரோகிணியின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் மனோஜ், தான் கொண்டு வந்த பணத்தை மருத்துவச் செலவுக்காக வைத்துக்கொள்ளும்படி கொடுத்து அங்கிருந்து கிளம்புகிறார். இந்நிலையில், கனகாவுடனான வாழ்க்கையும், ரோகிணி விவகாரமும் சேர்ந்து மனோஜின் அடுத்த முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
இரவு நேரத்தில் மீனா வீட்டிற்கு திரும்ப தாமதமாகிறது. இதனால் முத்து மிகவும் பதற்றமடைந்து, என்ன நடந்தது என்று கவலையுடன் காத்திருக்கிறார். இதனால் ஏதாவது பெரிய சம்பவம் நடக்கப் போகிறதோ என ரசிகர்கள் எதிர்பார்க்கும் நிலையில், காட்சி சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு விளம்பரமாக மாறுகிறது. இரவில் வாகனம் ஓட்டும் போது மொபைலில் பேசாமல், தேவையெனில் லைவ் லொகேஷனை பகிர வேண்டும் என்ற தகவலை அந்த காட்சி வலியுறுத்துகிறது.
55
புதிய காதல் டிராக் வருகிறதா?
இதற்கிடையில், ஆங்கிலப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த ஸ்வேதாவுக்கு நண்பர்கள் இணைந்து சிறப்பு விருந்து ஏற்பாடு செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சி ஸ்ருதியின் ஹோட்டலில் நடைபெறுகிறது. அப்போது, ஸ்வேதாவின் உதவியால் தங்களது தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக முத்து நன்றியை தெரிவிக்கிறார். மேலும், மீனாவும் ஆங்கிலத்தில் பேசி ஒரு கார்ப்பரேட் ஆர்டரைப் பெற்றிருப்பதாக கூறி, ஸ்வேதாவுக்கு பரிசும் வழங்குகிறார்.
இந்த கொண்டாட்டத்தின் மூலம் மிஸ்ராவும் ஸ்வேதாவும் நெருக்கமாகும் வகையில் கதைக்களம் நகருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.மனோஜ் - ரோகிணி பிரச்சினை எந்த முடிவை எட்டும்? ரேகாவுக்காக முத்து செய்த உதவி குடும்பத்தில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்? மிஸ்ரா - ஸ்வேதா இடையே காதல் மலருமா? என்பதற்கான பதில் இனி வரும் எபிசோட்களில் தெரியவரும்.