Siragadikka Aasai : முத்து, மீனாவிடம் இருந்து ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த மனோஜ்... கிரிஷ் உடன் வந்து பிளாக்மெயில் பண்ணும் ரோகிணி

Published : Aug 12, 2026, 09:09 AM IST

Siragadikka Aasai Serial 12 August 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜின் ஷோரூமிற்கு கிரிஷ் உடன் சென்ற ரோகிணி, அவரை பிளாக்மெயில் செய்திருக்கிறார்.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், மனோஜ் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்வதற்காக வந்திருக்கும் நிலையில், அங்கு மனோஜுக்கும் கனகாவுக்கும் சட்டப்படி பதிவு திருமணம் நடைபெறுகிறது. அந்த திருமணம் நடந்து முடிந்த கையோடு, கனகாவின் அம்மாவிடம் பேசும் ஜோதிடர், இனி மனோஜ் தான் உங்க மருமகன்னு சட்டப்படி பதிஞ்சாச்சு என கூறுகிறார். அப்போது குறுக்கிட்டு பேசும் மனோஜ், ஊட்டியில் உள்ள இடத்தை என் பெயருக்கு மாத்தி தருவீங்கள்ல என கேட்க, அதற்கு கனகாவின் அம்மா நிச்சயம் உங்களுக்கு தான் என கூறுகிறார்.

Siragadikka Aasai : மனோஜின் இரண்டாவது திருமணம் அம்பலமாகுமா? முத்து-மீனா பார்த்த காட்சியால் எதிர்பார்ப்பு

25
எஸ்கேப் ஆன மனோஜ்

பின்னர் ரிஜிஸ்டர் அலுவலகத்தின் வாயிலில் நின்று அனைவரும் பேசிக் கொண்டிருக்க, அப்போது முத்துவும், மீனாவும் வெளியே வருகிறார்கள். அவர்கள் தங்கள் வீட்டில் மாடி ரூம் கட்ட அனுமதி வாங்க அங்கு வந்திருந்த நிலையில், காரில் ஏறும் முன் மீனா, மனோஜை பார்த்துவிடுகிறார். அப்போது முத்துவும் மீனாவும் நீ எங்கடா இங்க என மனோஜிடம் கேட்க, அப்போது ஜோதிடரையும், கனகாவையும் காட்டி இவர்களுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ், அதற்காக சாட்சி கையெழுத்து போட வந்தேன் என சொல்லி சமாளிக்கிறார். இதை நம்பி முத்துவும் அங்கிருந்து கிளம்புகிறார்.

35
பாட்டியிடம் சிக்கிய ரவி, முத்து

பின்னர் முத்து, மீனா வீட்டுக்கு சென்றதும், அவர்கள் கிச்சனில் ஜோடியாக நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதைப்பார்த்து ஷாக் ஆன விசாலாட்சி, மாடியில் சத்தம் கேட்பதை பார்த்து, எட்டிப்பார்க்கிறார். அங்கு ரவியும் ஸ்ருதியும் ஜோடியாக செல்பி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பின்னர் அண்ணாமலையை கூப்பிடும் நாச்சியார், உன் ரெண்டு பசங்களும் என்ன பண்றாங்கனு பாரு என சொல்லி, ரவி, முத்து இருவரையும் ஹாலுக்கு அழைத்து அந்த பொண்ணுங்க கூட என்னடா பண்றீங்க என விசாரிக்க ஆரம்பிக்கிறார். அப்போது மனோஜ் அங்கு வருகிறார்.

45
மனோஜை சந்திக்கும் ரோகிணி

அவரைப் பார்த்ததும், உங்க அண்ணன் மனோஜுக்கு தான் முதலில் கல்யாணம் பண்ணனும் என பாட்டி சொல்ல, கல்யாணமா எனக்கு வேண்டாம் என பதறுகிறார் மனோஜ். பின்னர் பாட்டி உள்ளே சென்றதும், மனோஜை பார்த்து கிண்டலடிக்கும் முத்து, இவனை மாதிரி நடந்துக்கணுமா எல்லாம் எங்க நேரம் என சொல்லி கலாய்க்கிறார். அப்போது அங்கிருந்த விஜயா, மனோஜை ஷோரூமிற்கு கிளம்பிச் செல்லுமாறு கூறுகிறார். இதையடுத்து மனோஜ் ஷோரூமிற்கு கிளம்பி செல்ல, அங்கு ரோகிணி, கிரிஷ் உடன் வந்து அதிர்ச்சி கொடுக்கிறார்.

55
கிரிஷிடம் சிக்கிக் கொண்ட மனோஜ்

அப்போது மனோஜிடம், கிரிஷை கவனித்துக் கொள்ளுமாறு சொல்ல, அதற்கு மனோஜ் மறுக்கிறார். உடனே உனக்கு டைவர்ஸ் வேணும்னா நீ இதை செஞ்சு தான் ஆகணும் என பிளாக்மெயில் பண்ணும் ரோகிணி, கிரிஷை அங்கு விட்டுச் செல்கிறார். இதையடுத்து கிரிஷிடம் பேசும் மனோஜ், இங்க வாடா என அழைக்க, அதற்கு கிரிஷ், உங்களை எனக்கு பிடிக்காது அதனால உங்ககிட்ட வரமாட்டேன் என சொல்கிறார். பின்னர் உனக்கு என்னை பிடிக்க நான் என்ன செய்ய வேண்டும் என மனோஜ் கேட்க, அதற்கு கிரிஷ் ஒரு கேள்வி கேட்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.

Read more Photos on
click me!

Recommended Stories