Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதியை பழிவாங்க அவரின் பழைய காதலன் உடன் கூட்டு சேர்ந்து திட்டம் தீட்டி உள்ளார் நீத்து. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா தான் சொந்தமாக யூடியூப் சேனல் ஆரம்பிக்க உள்ளதாக சொல்லி அதற்காக ஸ்ருதியிடம் ஐடியா கேட்டிருந்தார். அதுமட்டுமின்றி அந்த யூடியூப் சேனலில் தான் நடனமாடி வீடியோ பாட இருப்பதாகவும் கூறி இருந்தார். பின்னர் மீனா ரூமுக்குள் சென்று முத்துவிடம் ஆலோசனை செய்யும்போது, முத்து, நீயும் நீ பூ கட்டுவதை வீடியோவாக போடு என சொல்கிறார். அதற்கு மீனாவும் ஓகே சொன்னதோடு, நீங்களும் உங்களுக்காக ஒரு யூடியூப் சேனல் தொடங்குங்க என ஊக்கப்படுத்துகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
மறுபுறம் மனோஜ், ரோகிணியிடம் பணம் கொடுப்பதற்காக அவரது வீட்டிற்கு செல்கிறார். அங்கு வாசலில் நின்று பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு மனோஜ் சொல்ல, நீ வீட்டுக்குள்ள வா என அழைத்து செல்கிறார் ரோகிணி. உள்ளே சென்றதும் மனோஜை அமரச் சொல்லும் ரோகிணி, அவருக்காக தன் கையால் செய்த சாப்பாட்டை போட்டு கொடுக்கிறார். மனோஜும் வேறு வழியின்றி சாப்பிடுகிறார். அப்போது அவரிடம் பேசும் ரோகிணி, நான் இதுமாதிரி நிம்மதியா சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு. உன் அம்மா திட்டுனதில் இருந்து என்னால் மீண்டு வர முடியவில்லை என கூறுகிறார்.
35
டைவர்ஸ் கொடுக்க சம்மதித்த ரோகிணி
பின்னர் மனோஜிடம் நாம ரெண்டு பேரும் தனியா ஒரு வீடு எடுத்து சந்தோஷமா வாழலாம் என ரோகிணி சொல்ல, அதற்கு அம்மா ஒத்துக்க மாட்டாங்க, நீ எனக்கு டைவர்ஸ் கொடுத்திரு என கேட்கிறார். அதற்கு ரோகிணி, உன்னை நான் ஜெயிலில் இருந்து வெளியே எடுப்பதற்காக 5 லட்சம் ரூபாய் செலவழிச்சிருக்கேன். அந்த பணத்துக்காக நான் இப்போ வரை வட்டி கட்டிட்டு இருக்கேன். நீ அந்த 5 லட்ச ரூபாயை திருப்பி கொடு நான் உனக்கு டைவர்ஸ் கொடுத்திடுறேன் என டீலிங் பேசுகிறார் ரோகிணி. அதற்கு மனோஜும் ஓகே சொல்லிவிடுகிறார்.
மறுபுறம் நீத்து ஒரு ரெஸ்டாரண்டில் அமர்ந்திருக்க, அவரை சந்திக்க ஸ்ருதியின் முன்னாள் காதலனான பிஜு வருகிறார். பிஜு, ஸ்ருதியை ஒருதலைபட்சமாக காதலித்தவர். தன்னை காதலிக்க மறுத்ததால் ஸ்ருதி மீது ஆசிட் வீசும் அளவுக்கு சென்று, பின்னர் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர். அவர் தற்போது விடுதலை ஆகி வந்துள்ளதால், அவரை அழைத்து பேசும் நீத்து, நான் சொல்வதை செய்தால் ஸ்ருதி உங்களுக்கு கிடைப்பால் என்று சொல்கிறார். ஸ்ருதி உங்களுக்கு கிடைச்சா, என்னோட ரவி என்கூட வந்திருவான் என கூறுகிறார்.
55
ஸ்ருதிக்கு காத்திருக்கும் சிக்கல்
ஸ்ருதிக்கு எல்லாமே அவளுடைய ரெஸ்டாரண்ட் தான். அதை எப்படியாவது மூட வைக்க வேண்டும் என பிஜுவிடம் கூறுகிறார். அதற்கு பிஜுவும் ஓகே சொல்கிறார். இருவரும் சேர்ந்து ஸ்ருதிக்கு எதிராக பிளான் போட ஆரம்பித்திருக்கிறார்கள், இந்த பிஜுவால் ஸ்ருதிக்கு என்ன ஆபத்து வரப்போகிறது. நீத்துவின் இந்த சதிவேலையை ஸ்ருதி முறியடிப்பாரா? இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.