இந்த புதிய தொடருக்கான ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'ஈ புழயும் கடந்து' சீரியல் வரும் பிப்ரவரி 2-ம் தேதி முதல், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
மதுரையில் இருந்து மலையாளம் வரை: மதுரையைச் சேர்ந்த கோமதி பிரியா, ஆரம்பத்தில் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தார். பின்னர் விஜய் டிவியின் 'வேலைக்காரன்' மற்றும் 'ஓவியா' போன்ற தொடர்களில் நடித்திருந்தாலும், 'சிறகடிக்க ஆசை' மீனாவாகத்தான் ரசிகர்களின் பேரன்பைப் பெற்றார். ஏற்கனவே மலையாளத்தில் நடித்த அனுபவம் இவருக்கு இருப்பதால், இந்த புதிய வாய்ப்பு அவரது திரைப் பயணத்தில் அடுத்தகட்டமாகப் பார்க்கப்படுகிறது.