Singappenne : மாமியாரை வழிக்கு கொண்டுவர ஆனந்தி எடுக்கும் முடிவு! துளசியின் சூழ்ச்சி அம்பலமாகுமா? சித்ரவதை செய்யும் லலிதா!

Published : Mar 04, 2026, 02:53 PM IST

Anandhi Anbu Convincing in Singappenne Serial : சிங்கப்பெண்ணே சீரியலில் கோபித்துக் கொண்டு போன லலிதா அம்மாவை சமாதானப்படுத்தும் ஆனந்தி மற்றும் அன்பு இவர்களை ஒன்று சேரவிடாமல் சூழ்ச்சி செய்யும் துளசி என்ன நடக்கிறது என்பதை இதில் பார்க்கலாம்.

PREV
15
Anandhi convincing Lalitha Amma, Singapenne Serial Today Episode Tamil

சிங்கப் பெண்ணே சீரியலில் நேற்றைய எபிசோடில் யாழினியின் காதலன் உங்க அம்மா இந்த கோயில்ல தான் உட்கார்ந்து இருக்காங்க என்ற தகவலை சொன்னதும் யாழினி, அன்பு, ஆனந்திடம் சொல்ல இருவரும் கோயிலுக்கு சென்று தன் அம்மாவை எப்படியாவது வீட்டுக்கு கூட்டி வரவேண்டும் என்று நோக்கத்தில் அங்கிருந்து கிளம்புகின்றனர். லலிதா அம்மாவை பார்க்கும் ஆனந்தி மற்றும் அன்பு: லலிதா அம்மா மற்றும் துளசி இருவரும் கோயில் இருப்பதை ஆனந்தி மற்றும் அன்பு இருவரும் பார்க்கின்றனர். ஆனந்தி அங்கிருந்து அத்தை என்று அங்கிருந்து ஓடி வருகிறார். 

25
Thulasi's new master plan

லலிதா இங்கே எதுக்கு வந்தீங்க என்று சொல்கிறார். அம்மா நான் சொல்றதை கேளுமா என்று சொல்கிறார் அன்பு. அதான் மொத்தமா தல முழுங்கிட்டு நான் வந்துட்டல இங்கே எதுக்குடா வந்த என்ன நிம்மதியாக இருக்க விட கூடாதுன்னு முடிவு பண்ணிட்டியா என்றெல்லாம் சட்டையை பிடித்துக் கொண்டு அன்பு விடம் சண்டை போடுகிறார் லலிதா அம்மா. அம்மா ஏம்மா இப்படி எல்லாம் பண்ற என்று அன்பு கேட்க யாருடா உன் அம்மா , நான் உன் அம்மா நீ இப்பதான் உனக்கு தெரியுதா போலீஸ் ஓட வீட்ல வந்து நிக்கும்போது அப்பல தெரியலையா உனக்கு கத்தி கூச்சல் அடிக்கிறார் லலிதா அம்மா. அன்பு அம்மா அங்கேயே நீங்க பேச விடல இங்கே நீ பேச விட மாட்டேங்குற. நான் என்ன சொல்ல வரேன்னு காது கொடுத்து கேளுமா என்று சொல்கிறார் அன்பு. ஏய் நான் உன்ன பேச விடலையா. 

35
Singapenne today's gripping scenes

நீ என் பேச்சை கேட்டியா டா. பேசாத அன்பு என்று அந்த வக்கீல் அம்மா சொன்னதும் பேசாம நின்ன. உனக்கு என்ன விட எல்லாரும் முக்கியமா போய்ட்டாங்களா. இன்று கடுகோவத்தில் பேசுகிறார் லலிதா அம்மா. அம்மா மற்றும் ஆனந்தியை விட்டுக் கொடுக்காத அன்பு: அம்மா எனக்கு நீயும் முக்கியம் தான் மா.ஆனா நீ மட்டும் தான் முக்கியம்னு என்னால நினைக்க முடியல. ஏன்னா ஆனந்த் என் பொண்டாட்டி. அவளை என்னால விட்டுக் கொடுக்க முடியாதும்மா. எனக்கு நீங்க ரெண்டு பேருமே வேணுமா? புரிஞ்சுக்கோங்கமா தனது பக்கம் இருக்கும் நியாயத்தை சொல்கிறார் அன்பு. வேணாம் அன்பு இதுக்கு மேல நீ எதுவும் பேசாத. தயவு செஞ்சு போயிடு என் கண்ணு முன்னாடியே நிக்காத. சொன்னா கேளு போ என்று சொல்கிறார் லலிதாம்மா.

45
துளசியின் சூழ்ச்சி:

வீட்ல இருந்து கிளம்பி வரும்போது நீங்க போனா எனக்கு என்னங்கற மாதிரி அப்படியே நின்னையே மாமா. சரி இப்பயாவது தேடி வந்து ஏன் பார்த்தா இப்பவும் இப்படி பேச எப்படி மாமா உனக்கு மனசு வருது. என் மேல கோபப்பட்டாலும் பரவால்ல அடிச்சாலும் பரவால்ல. யார் யாரெல்லாம் அடிச்சு வீட்டை விட்டு துரத்திட்டாங்க. நீ அடிச்சா ஒன்னும் நான் குறைஞ்சு போயிட மாட்டேன். அதுக்காக என்னால பேசாம இருக்க முடியாது நீ பண்றது தப்பு மாமா ரொம்ப தப்பு என்று தனது சூழ்ச்சிகளை சொல்கிறார் துளசி. தப்புதான் நான் செஞ்சது பெரிய தப்பு தான் . அது தப்பு என்ன தெரியுமா? உன்னை வீட்டை விட்டு அடிச்சு தொரத்தாம விட்டது அதுதான் நான் கொஞ்சம் பெரிய தப்பு துளசிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அன்பு சொல்கிறார்

55
சிங்கப் பெண்ணே இன்றைய விறுவிறுப்பான காட்சிகள்

ஆனந்தியிடம் சத்தியமாகும் லலிதா அம்மா: எங்க அக்கா வாழ்க்கைக்காக நான் ஒரு மாசத்துக்கு மட்டும் உங்க கூட இந்த வீட்டில் இருக்கிறதுக்கு என்ன தயவு செஞ்சு எனக்காக ஒத்துக்கோங்க என்று கெஞ்சி லலிதா அம்மாவின் கேட்டதுக்கு பிறகு அப்படி என்றால் நீ சொன்னது உண்மைனா சத்தியம் பண்ணு என்று ஆனந்தியிடம் சத்தியம் வாங்குகிறார் லலிதா அம்மா. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்தது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories