வேலையில் சேந்து ஒரு மாதம் ஆவதற்குள்ளாக செந்தில் இது வாங்க வேண்டும், அது வாங்க வேண்டும் என்று ஆசையில் இருந்தார். மேலும், மனைவி மீனாவிற்கு என்ன வேண்டும் என்று ஆசையோடு கேட்டு ஒரு மாதிரியாக உற்சாகத்தில் இருந்தார். இந்த நிலையில் தான் இன்றைய எபிசோடில் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் செந்திலுக்கான சம்பளம் கொடுக்கும் எபிசோடு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், செந்தில் சம்பளம் பெற்ற கையோடு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கிஃப்ட் வாங்கிக் கொண்டு வந்தார். இதில் அம்மாவிற்கு மட்டும் ரூ.1800க்கு புடவை, மீனா, சுகன்யா, தங்கமயில், ராஜீ ஆகியோருக்கு ஒரே மாதிரியான புடவை, தங்கை அரசிக்கு சுடிதார் மற்றும் மேட்சிங் மேட்சிங்காக வளையல் மற்றும் ஜிமிக்கில் கதிர், பழனிவேல், சரவணன் ஆகியோருக்கும் டிரஸ் என்று வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து அசத்தினார்.