கெஞ்சி கதறிய மாரி – காலில் கூட விழுந்தாலும் கல் நெஞ்சுக்காரியாக இருந்த ராஜீ – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!

Published : Aug 28, 2025, 04:22 PM IST

Mari Requested to Raji to save his Son : தனது மகனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அம்மா மாரி ராஜியை அழைத்து அவரது காலில் விழுந்து கதறி அழுதுள்ளார்.

PREV
14
குமரவேல் மற்றும் ராஜீ

Mari Requested to Raji to save his Son : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் யாருமே எதிர்பார்க்காத டுவிஸ்ட் என்றால் அது அரசி தனக்கு தானே திருமணம் செய்து கொண்டது தான். அது குமரவேலுவிற்கு டுவிஸ்ட் கொடுக்க பிறகு குமரவேல் வீட்டிலே கொஞ்ச நாட்கள் தங்கி அவருக்கு டார்ஜர் கொடுத்தார். கடைசியில் பாண்டியனுக்கு உண்மை தெரிய வர அரசியை தனது வீட்டிற்கே கூட்டி சென்றார்.

24
குமரவேல், மாரி, ராஜீ

கோமதியை காதல் திருமணம் செய்ததால் பாண்டியனுக்கும் அண்ணன் தம்பிகளான முத்துவேல் மற்றும் சக்திவேல் குடும்பம் பகை குடும்பமாக மாறியது. இதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இரு குடும்பம் உறுப்பினர்களும் பேசிக் கொள்வதே கிடையாது. இந்த சூழலில் தான் எதிர்பாராத விதமாக கதிர் மற்றும் ராஜீக்கு திருமணம் நடக்க, அது சக்திவேல் மற்றும் முத்துவேல் குடும்பத்திற்கு அவமானமாக மாறுகிறது. இதைத் தொடர்ந்து பாண்டியன் குடும்பத்தை பழி தீர்க்க, சக்திவேலின் மகனான குமரவேல் அரசியை காதலிப்பதாக நாடகமாடுகிறார். அவருடன் வெளியில் சென்று வருகிறார்.

34
பாண்டியன், மீனா, செந்தில்

சினிமா, ஹோட்டல் என்று அவர்களது காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் குமரவேலுவைப் பற்றிய உண்மைகள் தெரிய வர அரசி அவரிடமிருந்து விலக, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி அரசியை கடத்திச் செல்கிறார் குமரவேல். அரசிக்கு நடக்க இருந்த திருமணத்திற்கு முன்னதாக அவரை கடத்திச் சென்ற நிலையில் மறுநாள் அரசியுடன் குமரவேல் வீட்டிற்கு வருகிறார். இதைத் தொடர்ந்து தன்னை மட்டுமின்றி தனது குடும்ப மானத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அரசி தனக்கு தானே திருமணம் செய்து கொண்டு குமரவேலுவை சித்திரவதை செய்கிறார்.

44
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

சினிமா, ஹோட்டல் என்று அவர்களது காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் குமரவேலுவைப் பற்றிய உண்மைகள் தெரிய வர அரசி அவரிடமிருந்து விலக, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி அரசியை கடத்திச் செல்கிறார் குமரவேல். அரசிக்கு நடக்க இருந்த திருமணத்திற்கு முன்னதாக அவரை கடத்திச் சென்ற நிலையில் மறுநாள் அரசியுடன் குமரவேல் வீட்டிற்கு வருகிறார். இதைத் தொடர்ந்து தன்னை மட்டுமின்றி தனது குடும்ப மானத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அரசி தனக்கு தானே திருமணம் செய்து கொண்டு குமரவேலுவை சித்திரவதை செய்கிறார்.

குமரவேலுவின் காரணமாக அரசி அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால், இதில் நான் எதுவும் தலையிட முடியாது என்றார். ஒரு கட்டத்தில் கதறி அழுத மாரி, ராஜீயின் காலில் விழுந்து அழுதார். எனினும், ராஜீ தன்னால் எந்த உதவியும் செய்ய முடியாது என்று காலை விரித்துள்ளார்.

உண்மையில் ஜெயிலுக்கு சென்று ஜாமீனில் வந்த குமரவேல் இப்போது கொஞ்சம் மனம் திருந்தியிருக்கிறார். ராஜீயை தனியாக பார்த்து பேசியிருக்கிறார். அரசியிடம் மன்னிப்பு கேட்டதாக சொல் என்று கூறியிருக்கிறார். அரசியிடம் பேச முயற்சி செய்துள்ளார். மேலும், கதிர் மற்றும் ராஜீ இருவரும் உடற்பயிற்சி செய்யும் போது அவர்கள் சந்தோஷமாக இருப்பதை பார்த்து மகிழ்ந்துள்ளார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories