சுகன்யா மற்றும் குமரவேல் இருவரும் பாண்டியன் குடும்பத்தில் நேர்ந்த அவமான்ங்களை சொல்லி பழனிவேலுவை கஷ்டபடுத்தினர். அதற்கு பழனிவேலுவோ இவ்வளவு ஏன் உன்னுடைய அப்பா, பெரியப்பா பேசாத பேச்சா, பண்ணாத அவமானங்களா என்று கேட்டார். மேலும், அன்று அப்படி பேசிய அண்ணன்கள் தான் இன்று வேறு மாதிரி பேசுகிறார்கள். அதே போன்று தான் இன்று அவர்கள் நடந்து கொள்வதை வைத்து அவர்களுக்கு என் மீது பாசம் இல்லை என்று நினைத்துவிட முடியாது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நான் அவர்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்தேன். அதனால், அவர்களைப் பற்றி தனக்கு நன்கு தெரியும் என்றார்.