மகனை காப்பாற்ற கோமதியின் போராட்டம்
கோட்டுக்கு போகும் கோமதி, பாக்கியம் குடும்பத்திலிருந்து தனது மகன் சரவணனை காப்பாற்ற வேண்டும் என வக்கீலிடம் கோரிக்கை விடுப்பது கதைக்கு சட்ட ரீதியான திருப்பத்தை கொண்டு வருகிறது. குடும்ப நல நீதிமன்றத்தில் இந்த விவகாரம் எவ்வாறு மாறப்போகிறது என்ற கேள்வி, ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேருக்கு நேர் மோதல் – சரவணன் Vs தங்கமயில்! காதலா? கண்ணீரா?
குடும்ப நல நீதிமன்றத்தில் மயிலும் சரவணனும் நேருக்கு நேர் சந்திக்கும் தருணம், சீரியலின் ஹை பாயிண்ட். “என் கேரக்டர் பத்தி தப்பா பேசுனவ கூட நான் சேர்ந்து வாழ முடியாது” என சரவணன் கூறும் வசனம், உறுதியான முடிவை வெளிப்படுத்துகிறது. ஆனால் அதே நேரத்தில், தங்கமயில் “எனக்கு விவாகரத்து வேண்டாம்… சரவணனோட சேர்ந்து தான் வாழணும்” என்று நீதிமன்றத்தில் கூறுவது, கதைக்கு புதிய உணர்ச்சி அடுக்கை சேர்க்கிறது.