மகாநதி சீரியலில் எதிர்பாராத ட்விஸ்ட்.! காவேரி இறந்துவிட்டாளா? ஏமாற்றத்தில் ரசிகர்கள்.!

Published : Feb 08, 2026, 02:52 PM IST

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியல் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்திற்கான ப்ரோமோ ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.

PREV
15
Mahanadhi Serial Today Episode

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது மகாநதி சீரியல். தற்போது இந்த சீரியல் உணர்ச்சிகரமான மற்றும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. விஜய் மற்றும் காவேரி தம்பதியினரின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பசுபதி காவேரி குடும்பத்தை பழிவாங்க சந்தானத்திற்கு இன்னொரு குடும்பம் இருக்கிறது என நம்ப வைத்துள்ளார். அந்த உண்மையை கண்டுபிடித்த விஜய் ராகவை அடித்து துவைக்கிறார். அந்த கோபத்தில் ராகவ் விஜய் மற்றும் காவேரியை லாரி ஏற்றி கொலை செய்ய முயச்சிக்கிறார்.

25
விஜயின் பாட்டி செய்த சதி

இந்த விபத்தில் படுகாயமடைந்த காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால் காவிரிக்கு பலத்த அடிபட்டதன் காரணமாக அவர் பழைய நினைவுகளை இழந்து விட்டார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் விஜயின் பாட்டி விஜயையும் காவேரியையும் பிரித்து விட வேண்டும் என்று முடிவெடுக்கிறார். பாட்டியின் திட்டத்திற்கு தாத்தாவும் சம்மதம் தெரிவிப்பது போல இருக்கிறார்.

35
விஜய் காவேரி பிரிவு

இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் காவேரியின் தாயாரிடம் விஜயின் பாட்டி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது காவேரி மறந்தது அனைத்தும் மறந்ததாகவே இருக்கட்டும். அவளை நீங்கள் ஊருக்கே அழைத்துக் கொண்டு சென்று விடுங்கள் என்றும், ஆனால் தனது பேத்தியை மட்டும் தங்களிடம் கொடுத்து விடுமாறு கூறுகிறார். இதற்கிடையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி வரும் விஜய் தனது தாத்தா மற்றும் பாட்டியிடம் காவிரி எங்கே என்று கேட்கிறார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் விஜயின் பாட்டி கதறி அழுகிறார்.

45
காவேரி இறந்துவிட்டதாக கூறும் விஜய் குடும்பம்

அப்போது விஜயின் குடும்பத்தில் இருப்பவர்கள் காவேரி இறந்து விட்டதாக பொய் கூறுகின்றனர். இதைக் கேட்டவுடன் விஜய் கதறி அழுகிறார். அப்போது பாட்டி, அவரின் குழந்தையை கொண்டு வந்து விஜயின் கைகளில் கொடுக்கிறார். அதை பார்த்த விஜய் காவேரியை நினைத்து உடைந்து அழுகிறார். அப்போது பாட்டி உனக்காக இல்லை என்றாலும் உன் குழந்தைக்காகவாது நீ நன்றாக வாழ வேண்டும் என்று கூறுகிறார். அத்துடன் இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

55
தாத்தாவை திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்

இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் விஜயின் தாத்தா இப்படி மாறுவார் என்று எதிர்பார்க்கவில்லை என கமெண்ட் செய்து வருகின்றனர். ஆரம்பம் முதலே விஜய் காவேரிக்கு ஆதரவாக இருந்து வந்தவர் விஜயின் தாத்தா தான். ஆனால் அவரே இப்பொழுது மாறிவிட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories