என்ன பேய பாத்த மாதிரி பாக்குறீங்க: ரூ. 10 லட்சத்த வாங்கிட்டு போன பாண்டியனின் அக்கா!

Published : Sep 16, 2025, 06:40 PM IST

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் அரசி பற்றி விஷயம் செய்தியாக வெளியான நிலையில் அதைப் பார்த்துவிட்டு பாண்டியனின் அக்கா வீட்டிற்கு வந்துள்ளார்.

PREV
16
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும், ஏதோ நடக்கும் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நேற்றைய எபிசோடில் தனது பேரை காப்பாற்றிய மருமகன் பாண்டியன் கையை பிடித்து மாமியார் காந்திமதி கதறி அழுது தனது நன்றியை வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.

Huma Qureshi : 39 வயதில் அஜித் பட ஹீரோயின் ஹூமா குரேஷிக்கு நடந்த ரகசிய நிச்சயதார்த்தம்! மாப்பிள்ளை இந்த பிரபலமா?

26
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 587ஆவது எபிசோடில் அரசி மற்றும் குமரவேல் தொடர்பான கோர்ட் காட்சிகள் செய்தியாக வெளியானது. இதில், அரசி மீது எந்த தவறும் இல்லை. குமரவேல் தான் தான் செய்த தவறுக்காக அரசியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகவும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதைப் பார்த்த உமாவின் மகன் சதீஷ், அரசி மீது தவறு இல்லை என்பதை அறிந்து மீண்டும் அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார்.

கார்த்திக் போட்ட மாஸ்டர் பிளான்.. ஷாக்கான சாமுண்டீஸ்வரி நடந்தது என்ன? கார்த்திகை தீபம் 2 அப்டேட்!

36
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சிரியல் இன்றைய எபிசோடு

இதைப் பற்றி தனது அம்மாவிடம் விளக்கமாக எடுத்துக் கூறினார். அவரும் சரி, அரசியை மீண்டும் பெண் கேட்டு செல்வோம் என்று முடிவெடுத்தனர். அடுத்த காட்சியாக குமரவேல் மற்றும் காந்திமதி இருவரும் பேசிக் கொண்டனர். அதில், காந்திமதி தான் பாண்டியன் வீட்டிற்கு சென்று பாண்டியனிடமும், அரசியிடமும் பேசினார். அரசி தான் உன்னுடைய கேஸை வாபஸ் வாங்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறாள். அவளுக்கு அப்படியொரு மனசு. உண்மையில் அரசி ரொம்ப நல்லவள். பக்குவமான பெண் என்று பேசிக் கொண்டிருந்தார்.

Meena 2nd Marriage: 49 வயதில் மீனாவுக்கு 2-ஆவது திருமணமா? அவரே பகிர்ந்த தகவல்!

46
குமரவேலுவிற்கு அரசியை காதலித்து திருமணம் செய்ய ஆசை

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த குமரவேலுவிற்கு மீண்டும் அரசியை காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசை வந்தது. இதைப் பற்றி காந்திமதியிடம் கூறவே, கடவுளின் சித்தம் அதுவாக இருந்தால் அப்படியே நடக்கும். இறைவன் விட்ட வழி எதுவோ அதுவே நடக்கட்டும் என்றார். இதைத் தொடர்ந்து கதிர் மற்றும் ராஜீ தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு கடைசியாக உமா மற்றும் சதீஷ் இருவரும் பாண்டியனின் வீட்டிற்கு வந்தனர்.

56
உமா மற்றும் சதீஷைப் பார்த்து ஷாக்

அப்போது வீட்டு வாசல் வரை வந்த உமா (பாண்டியனின் அக்கா) என்ன பேய பாத்தமாதிரி பாக்குறீங்க. உள்ளே வரலாமா என்று கேட்க, பாண்டியனோ வீட்டிற்குள் வர சொல்கிறார். ஆனால், அவரை உட்கார சொல்லவே இல்லை. இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் பாண்டியனுக்கு மட்டுமின்றி குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உமா மற்றும் சதீஷைப் பார்த்து ஷாக் இருந்தது. ஏனெனால் உமா செய்த வேலை அப்படி. குடும்பத்திற்கு சாபம் விட்டுச் சென்றார். இப்போது நீண்ட நாட்களுக்கு பிறகு திரும்ப வந்துள்ளார். அவரது கணவர் வேறொரு சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர் இந்த காட்சிகள் இல்லை.

66
அரசிக்கும் சதீஷூக்கும் கல்யாணம்

ஏற்கனவே அரசி குமரவேல் பற்றி என்னிடம் கூறியிருந்தால். மேலும், அவன் இனிமேல் தனது வாழ்க்கையில் இல்லை என்றும் கூறியிருந்தார். இப்படி அம்மாவும், புள்ளையும் மாறி மாறி பேசிக் கொண்டிருந்த நிலையில் கடைசியில் பழைய விஷயங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு இனி அரசிக்கும் சதீஷூக்கும் கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறோம் என்று வெட்டு ஒன்னு துட்டு ரெண்டு என்று பேசிவிட்டார். இதை கேட்ட பாண்டியன், கோமதி, அரசி உள்பட குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories