பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை சீரியலில் ஒருபுறம் கதிர் மற்றும் ராஜீயின் காதல் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் மறுபுறம் அரசி மற்றும் பாண்டியனின் பாச காட்சிகள் ஒளிபரப்பு சேய்யப்படுகிறது. என்னதான், அரசி குமரவேலுவை நம்பி ஏமாந்திருந்தாலும் அரசிக்கு அவர் மீது காதல் இருந்துள்ளது. மேலும், தனது குடும்பத்தைக் காப்பாற்ற தனக்கு தானே தாலி கட்டிக் கொண்ட அரசி குமரவேல் வீட்டிற்கு சென்றார். அங்கு பல கொடுமைகளை அனுபவித்தார். அதோடு பதிலுக்கும் பல கொடுமைகளை செய்தார்.