Pandian stores 2 S2 E687, கோமதி தன் தம்பி பழனியிடம் மன்னிப்பு கேட்டு, அவருடன் இருந்த மனக்கசப்பை நீக்குகிறார். ராஜி எழுதிய கடிதம் அவளது தந்தை முத்துவேலின் மனதை மாற்றி, பிரிந்திருந்த குடும்பத்தை ஒன்று சேர்க்கும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
எபிசோட் தொடங்கியதும், கோமதி தனது தம்பி பழனியிடம் மிகவும் உணர்ச்சிகரமாகப் பேசுகிறார். கடந்த கால கசப்புகளை மறந்து, தனது குடும்பம் இப்போது தனது பக்கமே நிற்பது தனக்கு பெரும் ஆறுதலையும் சந்தோஷத்தையும் தருவதாகப் பழனியிடம் கூறுகிறார்.
25
"தனியாகக் கடை போட்டது தவறான விஷயம் இல்லை"
முக்கியமாக, பழனி தனியாகக் கடை போட்டது தவறான விஷயம் இல்லை என்பதை கோமதி தற்போது உணர்ந்து பேசுகிறார். "நான் உன் கடைக்கு வருவேன்" என்று கண்ணீருடன் கூறிய கோமதி, தம்பியிடம் மன்னிப்பும் கேட்கிறார். இத்தனை நாள் இருந்த இடைவெளி மறைந்து, அக்கா - தம்பி இருவருக்கும் இடையே மீண்டும் ஒரு பாசப் பிணைப்பு உருவானது ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.
35
மயிலின் சந்தேகம் மற்றும் பழனியின் விளக்கம்
பழனி தனது வீட்டில் பேசிக்கொண்டிருக்கும்போது, அவரது மனைவி ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறார். "இந்த காலத்தில் யாரையுமே நம்ப முடியாது" என்று கூறும் அவர், வீட்டை விட்டுத் துரத்தியவர்கள் மீண்டும் உங்களைச் சேர்த்துக் கொண்டார்களா? என்று கேட்கிறார். அதற்குப் பதிலளித்த பழனி, தனது அக்கா தற்போது தன்னை முழுமையாகப் புரிந்துகொண்டதாகவும், தங்களுக்குள் இருந்த மனத்தாங்கல் நீங்கிவிட்டதாகவும் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
கதையின் மற்றொரு முக்கியப் பகுதியாக, ராஜி தனது அப்பா (முத்துவேல்) மற்றும் சித்தப்பாவிற்கு எழுதிய கடிதத்தைப் பழனியிடம் கொடுத்து அனுப்புகிறார். பழனி அந்தக் கடிதத்தை முத்துவேலிடம் கொண்டு சேர்க்கிறார். பல நாட்களாகத் தனது குடும்பத்துடன் பேசாமல் இருந்தது தனக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்தது என்பதை விவரித்திருந்தார்.ஒரு இக்கட்டான சூழலில், "சிங்கம் போல" வந்து தனது குடும்பத்தைக் காப்பாற்றியதற்காகத் தனது அப்பாவிற்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்திருந்தார். இந்தக் கடிதத்தைப் படித்த முத்துவேல், தனது மகளின் பாசத்தை உணர்ந்து கண்கலங்கினார். இத்தனை நாள் இருந்த கோபம் மறைந்து, தந்தை-மகள் பாசம் மேலோங்கியது.
55
சித்தப்பாவின் மன்னிப்பு
அதேபோல், ராஜியின் சித்தப்பாவும் கடிதத்தைப் படிக்கிறார். அதில் ராஜி தன் மனதில் இருந்தவற்றை உருக்கமாக எழுதியிருந்தார். மானசீகமாக மன்னிப்பு கேட்டதோடு, குடும்பத்திற்காக அவர்கள் செய்த உதவிகளுக்கு நன்றியும் கூறியிருந்தார். இதைப் படித்த அவரும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடித்தார். நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்த இதயங்கள், அந்தக் கடிதத்தின் மூலம் மீண்டும் ஒன்றுசேரத் தொடங்கியுள்ளன.